வியாழன், 11 ஜூன், 2026

காஞ்சி காமாட்சியின் வரலாறு - அன்னை ஒற்றை காலில் நின்று தவம் இயற்றுதல்.

காஞ்சி காமாட்சியின் வரலாறு 

சிவன் கண் மூடல், அதனால் ஏற்பட்ட சாபம் நீங்க அன்னை ஒற்றை காலில் நின்று தவம் இயற்றுதல்.




பார்வதி தேவி ஓரு நாள், விளையாட்டாக ஈசனின் கண்களை மூடினாள். அதன் விளைவாக மூஉலகமும் இருண்டது. படைத்தல்,  காத்தல் மற்றும் அழித்தல் அந்த ஒரு வினாடியில் ஸ்தம்பித்தது. செய்வதறியாது பார்வதி தேவி சிவனின் கண்களை மறைத்த தன் கைகளை உடனே எடுத்தால்.  இதனால் பெரும் பாபம் ஒன்று பார்வதி தேவியை சூழ்ந்தது. பார்வதி தேவி ஈசனிடம் இச்செயலுக்கான  பாப விமோசனம் என்ன என்று வினவினாள். ஈசன் பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னும் ஸ்தலத்தில் என்னை நோக்கி தவம்புரிவாயாக என்று கூறினார். தேவி பூலோகம் அடைந்து ஈசனை நோக்கி ஒற்றை காலில், ஒரு மாமரத்தின் அடியில்  நின்று கடும் தவம் புரிந்தால். மேலும் மண்ணால் ஆன ஒரு லிங்கத்தை செய்து பூஜித்தும் வந்தால். ஈசன் அன்னையின் தவத்தை சோதிக்க எண்ணி வேகவதி என்னும் 
ஆற்று வெள்ளம் பெருகும்படி செய்தார். அன்னை பார்வதி தேவி மண்ணால் தாம் அமைத்த லிங்கம் எங்கு ஆற்று வெல்ல நீரில் அடித்து சென்றிடுமோ என்று கலங்கி மண்ணால் ஆன லிங்கத்தை இருக ஆலிங்கனம் செய்து கொண்டால். ஈசன் அன்னையின் பக்தியையும், தவத்தையும் மெச்சி அன்னைக்கு காட்சி கொடுத்து ஆட்கொண்டார். இன்றும் காஞ்சியில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தில் அன்னை ஆலிங்கனம் செய்த வடுவை காணலாம். எந்த மாமரத்தினில் அடியில் அன்னை தவம் புரிந்தாலோ, அந்த மாமரம் தலவிருக்ஷமாக ஏகமபெரேஸ்வரர் கோயிலில் இன்றும் இருப்பதை நாம் காணலாம். அந்த மாமரம் 3500 வருட பழமைவாய்ந்த மரம் என்று  கூறப்படுகிகிறது. மேலும் அம்மரத்தில் உள்ள நான்கு கிளைகளில் இருக்கும் மாங்கனி வெவ்வேறு விதமாக சுவைக்க கூடியதாக இருக்கும் என்று செவி வழி செய்தி. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits