புதன், 29 டிசம்பர், 2021

ஒரு புது பொருளை சந்தை படுத்தும் உக்தி

ஒரு வணிகன் தன் பொருளை சந்தை படுத்த வேண்டும் என்றால், முதலில் அந்த பொருளை மக்கள் பயன்படுத்த வேண்டும். மக்கள் எடுத்தவுடன் அந்த பொருளை செலவு செய்து வாங்க மாட்டார்கள். ஆனால் அந்த பொருளை  மக்கள் பயன்படுத்தி அதுவே அவர்களுக்கு பழக்கமாக மாறிவிட்டால் வணிகன் அவனுடைய வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். அதனால் வணிகன் அந்த பொருளை முதலில் மக்களுக்கு இலவசமாக தந்து அந்த பொருளுக்கு பழக்கம் அடைந்து விடுவார்கள். பிறகு அந்த பொருள் அவர்கள் வாழ்கையுடய இன்றியமையாததாக மாறிவிடும். இதையே ஆங்கிலத்தில் Habituated என்று கூறுவர். பெரும்பாலான e-commerce வர்த்தகத்தில் இந்த யுக்தியையே பயன்படுத்துகிறார்கள். முதன் முதலில் இந்த முறையை நம் தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் நடைமுறை படுத்தினார். 
அன்றைய காலகட்டத்தில் மாட்டு மற்றும் குதிரை வண்டியில் மக்கள் பயணித்தாகள். ஒரு பெரிய தொழில் நிறுவனத்தை நடத்தும் முதலாளி, தன் தொழிலை விரிவு படுத்த எண்ணி, கார்களை இறக்குமதி செய்தார். இந்த காரை எப்படி சந்தை படுத்துவது, யாரிடம் கொண்டு விற்பது என்று தெரியவில்லை. அதற்கு அவர் ஒரு உத்தியை கையாண்டார். தங்கள் ஊரில் இருக்கும் பெரிய செல்வந்தர்கள் யாரென ஆராய்ந்தார். அப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுத்தார். தன் ஊரில் உள்ள பெரிய ஜமீந்தார் வீட்டுக்கு தான் இறக்குமதி செய்த காரை எடுத்து கொண்டு அவர் வீட்டுக்கு சென்றார். அவரிடம் நன்றாக பேசிவிட்டு அவரிடம் ஒரு உதவி கேட்டார். அது என்னவென்றால், தனக்கு அந்த ஜமீன்தாருடைய குதிரை வண்டியை ஒரு வாரத்துக்கு இறவலாக கேட்டார். அது வரைக்கும் ஜமீந்தார் தன்னுடைய காரையும், கார் ஓட்டுனரையும் பயன் படுத்தி கொள்ளலாம் என்று கூறினார். ஜமீந்தார் ஒரு வாரத்துக்கு அந்த காரில் தன் பயணத்தை தொடர்ந்தார். காரில் பயணம் செய்வது ஜமீண்தாருக்கு ஒரு புது விதமான அனுபவத்தை தந்தது. குதிரை வண்டியில் செல்வதை விட வேகமாகவும் விரைவாகவும் செல்ல முடிந்தது. மேலும் பயண அழுப்பே தெரியவில்லை. ஒரு வாரம் கழித்து தன்னுடைய காரை ஜமீண்தாரிடம் திருப்பி வாங்க அந்த தொழில் அதிபர் வந்தார். ஜமீண்தாருக்கோ காரை திருப்பி தர மனமில்லை. காரில் சென்ற அனுபவம் மேலும் தொடர ஆசை வந்தது. தொழில் அதிபரிடம் அந்த காரின் விலை என்னவென்றும் அதனை தானே வாங்கி கொள்வதாகவும் கூறினார். அந்த தொழில் அதிபருக்கு தான் எண்ணிய எண்ணம் நிறைவேறியது என்று சந்தோசம். தன்னுடைய முதல் காரை சாமர்ததியமாக வியாபாரம் செய்தார்.

யார் அந்த தொழில் அதிபர். அவர் வேறு யாருமில்லை TVS SUNDARAM IYENGAR அவர்கள்.






சனி, 27 நவம்பர், 2021

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 4

 CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 4



CHEIRO தன்னுடைய secretary இடம் தான் கை ரேகை பார்க்கும் நபரின் விபரஙகளை தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவு இட்டுறுந்தார். அது எதற்காக வென்றால் தன்னிடம் கை ரேகை பார்க்கும் நபர்கள் பெரும்பாலானோர் பிரபல்யம் ஆனவர்களாக இருப்பதாலும், அவர்களை பற்றி முன்னமே தெரிந்து இருப்பதனால் தான் கை ரேகையை பார்த்து அலசி கூறினாலும், அவரை பற்றி ஏற்கனவே தெரிந்ததால் கூறுகிறோம் என்று நினைக்க வாய்ப்பு உண்டு என்பதற்காக. ஒருமுறை அமெரிக்காவின்  எழுத்தாளரும் நகைச்சுவையாளருமான Mark Twain என்பவர் CHEIRO, விடம் தன்னுடைய கையை காண்பித்து எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வந்திருந்தார். CHEIRO விற்கு வந்திருப்பவர் பிரபல எழுத்தாளர Mark Twain என்பது தெரியாது. Mark Twain அவர்கள் அப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். Mark Twain அவர்கள் CHEIRO வை சந்திப்பதற்காக வந்து விட்டாரே தவிர மனதுக்குள் தான் நேரத்தையும் பணத்தையும் வீன் செலவு செய்கிறோமோ என்ற நினைப்பு மேலோங்கி இருந்தது. நாம் அனைவரும் நினைப்போம் அல்லவா, "வந்தது வந்து விட்டோம் அவர் என்னதான் சொல்ல போகிறார் என்று பார்த்து விடலாம்" என்று அவர் காத்திருந்தார். CHEIRO அவர்கள் Mark Twain அவர்களின கைகளை பார்த்து துல்லியமாக அவருடைய கடந்த காலத்தை கூறினார். Mark Twain அவர்களுக்கு ஒருத்தருடய எதிர்காலத்தை பற்றி முன்னமே தெரிந்து கொள்வது ஆச்சரியமாக இருந்தது. 

எழுத்தாளர் அல்லவா, எதையும் ஆதாரம் இல்லாமல் நம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. அதனால் அவர் CHEIRO விடம் பல கேள்விகளை கேட்டு தெளிந்தார். CHEIRO அவர்கள் தன்னிடம் உள்ள இரண்டு கை ரேகை பதிவுகளை காட்டி அதில் உள்ள ரேகைகள் ஒன்று போல் உள்ளதை காண்பித்தார். அவர்களுடைய வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் நடந்தேறின என்பதை கூறினார். அந்த இரண்டு கை ரேகை பதிவுகளில் ஒன்று தாயுடயது மற்றொன்று மகளுடயது என்று CHEIRO கூறினார். இந்த சம்பவம் Mark Twain அவர்கள் எழுதிய நாவலான "Pudd’nhead Wilson" க்கு கதை கருவாக அமைந்தது.

மேலும் Mark Twain அவர்கள் Cheiro வின் கைரேகை பதிவு புத்தகத்தில் இவ்வாறு எழுதினார் "Cheiro அவர்கள் என்னுடைய குணத்தினை மிக துல்லியமாக கூறினார். இதை நான் கூற கூடாது என்று நினைத்தாலும் Cheiro வின் ஆளுமை என்னை இதை ஒப்புக்கொள்ள வைத்தது".





புதன், 17 நவம்பர், 2021

இந்துமத சாஸ்திரத்தில் பெண்களுக்கு ஸ்ரார்த்தம் அதாவது மூதாதையரகளுக்கு திவசம் கொடுக்கும் உரிமை இல்லையா


இந்துமத சாஸ்திரத்தில் பெண்களுக்கு ஸ்ரார்த்தம் அதாவது மூதாதையரகளுக்கு திவசம் கொடுக்கும் உரிமை இல்லையா?

இந்த கேள்விக்கு எழுத்தாளர் பாலமுருகன் அவர்கள் ஒரு பெண்மணிக்கு கொடுத்த அற்புதமான இதிகாச புராணத்தை மேற்கோள் காட்டி கூறிய விளக்கம்.

"இந்துமத சாஸ்திரத்தில் மனைவிக்கு தர்ப்பணம் செய்கின்ற உரிமை இல்லை. கணவன் செய்யும்பொழுது அருகில் இருந்தும், இறந்து போன தன் கணவனுக்கு மகன் செய்கிறபொழுது தொலைவிலிருந்தும் அவள் பார்க்க வேண்டும் என்றே விதித்திருக்கிறது."

"நான் என் தகப்பனாருக்கு இதுபோலவே தர்ப்பணம் செய்ய விரும்புகின்றேன். இன்னும் சிறப்பாக செய்ய விரும்புகின்றேன். வெறும் நீர் அல்லாது மற்ற பண்டங்களும் செய்ய விரும்புகின்றேன். நான் திவசம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு அந்த உரிமை இல்லையா என்று ஒரு பெண் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் கேட்டார். அதற்கு பாலகுமாரன் அவர்கள் "ஆஹா. நீங்கள் தாராளமாக செய்யலாமே" என்று அவரிடம் சொன்னதும் அவர் முகம் மலர்ந்தார். "உண்மையாகவா, அல்லது வெற்று சமாதானமா." "உண்மையாக. ஒரு பெண்மணி தெவசம் செய்திருக்கிறார்." "யார்?" "சீதாபிராட்டி" "எப்போது? எங்கே? வனவாசத்தில் இராமர் தசரதருக்கு செய்ய வேண்டிய பித்ருக்களான நாள் வந்ததும் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தார். நடு வனாந்தரத்தில் இருந்தார். "லக்ஷ்மணா, கிராமங்களுக்கு போய் ஏதாவது தானியங்கள் வாங்கி வா. சிரார்த்தத்திற்கு உண்டான பொருள்களை சேகரித்து வா" என்று கட்டளை இட்டார். லக்ஷ்மணன் விரைவாகப் போனார். "சீதா, நானும் இங்கே ரிஷிகளின் ஆசிரமத்தில் படைக்கப்பட வேண்டிய உணவுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன். அந்த தானியங்களை சமைத்து நாம் உணவாக நம் பித்ருக்களுக்கு கொடுக்கலாம்" என்று ராமரும் நகர்ந்து போனார். சிரார்த்தம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கியது. சீதாபிராட்டி, கணவனும் வரவில்லை. கொழுந்தனும் வரவில்லையே என்று கவலைப்பட்டாள். சிரார்த்த காலம் முடியும் நேரம் நெருங்கையில் எழுந்தார். மனம் குவித்தார். சில பழங்களை சுட்டு மணல் மேட்டின் மீது வைத்தார். கையில் இருந்த சிறிது மாவை பிடித்து கெட்டியாக்கி அருகிலிருந்த மரத்திலிருந்து தேன் சேகரித்து அதை பிசைந்து இலையில் வைத்து மனம் உருகி தன் மாமனாரை வேண்டினார். 'இந்த வனாந்தரத்தில் எங்களுக்கு கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தயவு செய்து வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நேரே வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் என் மனம் சாந்தி அடையும்' என்று சொல்ல, அங்கு சில உருவங்கள் தோன்றின. அந்த மாவு பிண்டத்தின் மீதும், பழங்கள் மீதும் தங்கள் கையை வைத்து எடுத்துக் கொண்டதுபோல சுவீகரித்தன. 'நீங்களெல்லாம் யார்?' கொஞ்சம் திகைப்புடன் சீதாபிராட்டி கேட்டார். அவருக்கு வந்திருந்த உருவங்கள் எதையும் அடையாளம் காண முடியவில்லை. "நான் தசரதன். உன்னுடைய மாமனார் இவர்களெல்லாம் நம்முடைய முன்னோர்கள். இவர்களை வணங்கி அவர்கள் வாழ்த்தை பெற்றுக்கொள். நீ கொடுத்த தேனும் மாவும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. சுட்ட பழம் சுவையாக இருந்தது. மனம் உருகியும், முழுமனதோடும், நல்ல அன்போடும் நீ கொடுத்த இந்த பண்டங்களை நான் எடுத்துக் கொண்டேன். நீ மிகவும் சிரத்தையாக சிரார்த்தம் செய்திருக்கிறாய். அன்பும், அடக்கமும் கலந்த இந்த சிரத்தை என்னை சந்தோஷப்படுத்தியது" என்று வாழ்த்தினார். "நீங்களெல்லாம் வந்திருப்பது தெரிந்தால் என் கணவர் எவ்வளவு சந்தோஷப்படுவார். நான் சிரார்த்தம் செய்தேன். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று நான் அவரிடம் சொன்னால் என்னை நம்புவாரா." "நிச்சயம் நம்புவார். அதற்குண்டான சாட்சிகளை தயார் செய்து கொள்." என்று தசரதர் கட்டளை இட்டார். "பசு நீ தயவு செய்து சாட்சியாக இருந்து என் மாமனாரோடு நான்பேசியதை என் கணவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏ! தாழம்பூவே. என் மாமனார் வந்திருக்கிறார். அவருக்கு உன் அடிமடியில்தான் நான் தினைமாவு வைத்தேன். நீ சாட்சியாக இருக்க வேண்டும். ஏ! அக்கினியே. நீ விளக்காக இருந்து இந்த சிரார்தத்திற்கு நடுவே என் மாமனார் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாய். நீ சாட்சியாக இருக்க வேண்டும். ஏ! பல்குனி நதியே! உன்னுடைய நதியின் நீர் எடுத்து வந்துதான் இங்கு சுத்தம் செய்தேன். இந்த பண்டங்களை சுற்றி உன் நீரால்தான் அவருக்கு நிவேதனம் செய்தேன். எனவே, நீராகிய நீயும் எனக்கு சாட்சியாக இருக்க வேண்டும்" என்று சொன்னாள். "இவர்களை சாட்சியாக வைத்து மறுபடியும் உங்களை வணங்குகின்றேன். நீங்கள் என் சிரார்த்தத்தை ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி. நான் பாக்கியசாலி. நான் நலமோடு என் புருஷனோடு நீண்ட நெடுங்காலம் இருக்க என்னை ஆசிர்வதியுங்கள்" என்று வணங்கினார். தசரதரும், அவரது முன்னோர்களும் சீதாபிராட்டியை ஆசிர்வதித்தார்கள். சிரார்த்தம் முடிந்ததும் சீதாபிராட்டி களைப்புடன் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார். கண்மூடி தன் மாமனாரையும், வந்திருந்த மற்ற முன்னோர்களையும் மனதுக்குள் இருத்திக் கொண்டாள். தபதப்வென்று இராமர் ஓடி வருகின்ற சப்தம் கேட்டது. "எழுந்திரு. எழுந்திரு என்ன பகல் தூக்கம். நான் ஒரு ரிஷியிடம் சிலநல்ல விஷயங்கள் வாங்கி வந்திருக்கிறேன். எங்கே லக்ஷ்மணன்!" என்று கேட்க லக்ஷ்மணன் வேகமாக நடந்து வந்தான். அவனிடமும் நிறைய பண்டங்கள் இருந்தன. "இந்தா இதை வறுத்து வை. இதை அவித்து வை. இந்தா. என்று விதம்விதமான பண்டங்களை அவர் நீட்டினார். "இவையெல்லாம் நல்ல பண்டங்கள் பித்ருக்களுக்கு கொடுப்பதற்கு உகந்த பண்டங்கள்" என்று இராமர் சந்தோஷப்பட்டார். மெல்ல சீதை தயங்கினாள். "என்ன? இன்னும் தூக்கம் போகவில்லையா?" "இல்லை. நான் தூங்கவேயில்லை." "பிறகு என்ன செய்து கொண்டிருந்தாய்?" "சிரார்த்தம் செய்தேன்." "யாருக்கு?" "என்னுடைய மாமனாரான உங்கள் தகப்பனாருக்கு." "எப்படி?" "இதோ தேனும், மாவும் இருக்கிறது. பழங்கள் சுட்டு வைத்து அவைகளை இலையில் வைத்து படைத்தேன். இந்த இடத்தை சுத்தம் செய்தேன். அவர்களை வந்து எடுத்துக் கொள்ளும்படி வேண்டினேன்." "பிறகு?" "உங்கள் தகப்பனாரான என் மாமனார் நேரில் வந்து, மிக்க சந்தோஷம். உன் சிரார்த்தத்தை எடுத்துக் கொள்ள வந்தேன். இந்த பண்டங்கள் சுவையாக இருக்கின்றன. நீ சிரத்தையாக செய்த சிரார்த்தம் என்னை ஸ்வீகரித்தது. என்னை மகிழ்ச்சி படுத்தியது. இவை அனைத்தையும் நான் ஸ்வீகரிக்கிறேன்" என்று சொன்னார்." "அடடா, இதை எப்படி நம்புவது?" ஸ்ரீ இராமர் உரத்த குரலில் கேட்டார். "அந்த சந்தேகம் எனக்கும் வந்தது. என்ன செய்வது என்று என் மாமனாரையே கேட்டேன். யாரையாவது சாட்சியாக வைத்துக் கொள் என்று சொன்னார்." "அப்படியா. நீ செய்த சிரார்த்தத்திற்கு யார் சாட்சி." "இந்த பசு சாட்சி இந்த தாழம்பூ புதர் சாட்சி. இந்த அக்கினி விளக்கு சாட்சி. பல்குனி நதி சாட்சி" என்று அமைதியாகச் சொன்னாள். "இல்லை. என்னால் இவைகளை ஒன்றும் நம்ப முடியவில்லை." "இவர்களை கேளுங்கள். சாட்சி சொல்லும்". "நதியே, புதரே, பசுவே, விளக்கே இவள் சிரார்த்தம் செய்தாளா? ஒரு பெண் செய்த சிரார்த்தத்தை பித்ருக்கள் ஏற்றுக் கொண்டார்களா சொல்லுங்கள்" இராமர் அதட்டலாகக் கேட்டார். புதரும், பசுவும் மிரண்டன. விளக்கு துடித்தது. பல்குனி நதி அமைதியாக இருந்தது. "சொல்லுங்கள்" என்று கேட்க, "நாங்கள் எதையும் அறியோம்" என்று அவைகள் ஒரே குரலில் கூறின. சீதை விக்கித்துப் போனாள். இராமர் சட்டென்று தர்ப்பை பாயில் உட்கார்ந்தார். ஆசமனம் செய்தார். அருகில் தம்பியும் பாய் போட்டு உட்கார அவரும் சிரார்த்தத்திற்கு தயாரானார். "கொண்டு வந்த பொருள்களை வை" என்று கோபம் குறையாமல் சீதையை நோக்கி கட்டளை இட, அவளால் கால தாமதம் ஆகி விடுமே என்று பயப்பட, சீதை விரைவாக செயலாற்றி அவருக்கு முன்பு அந்தந்த விஷயங்களை வைத்து சிரார்த்த காரியங்களை விரைவாகச் செய்ய ஏற்பாடு செய்தாள். நீர் கொண்டு வைத்தாள். மனம் துக்கத்தில் ஆழ்ந்தது. ஸ்ரீ ராமர், சூரியனை நோக்கி வணங்கி, "சூரியனே நீ இங்கு வந்து பிராமணனாக அமர்ந்து இந்த சிரார்த்தத்தை என்னுடைய தந்தையிடம் கொடுக்கும்படியாக வேண்டுகிறேன்" என்றபோது ஒரு அசரீரி கேட்டது. "சிரார்த்தம் முடிந்துவிட்டதே." "என்னது?" "உங்கள் தகப்பனாருக்கு இன்று நீங்கள் செய்ய வேண்டிய சிரார்த்தம் செய்தாகிவிட்டதே" என்று சொல்ல, "யார் பேசுவது? ஏன் மறைந்திருந்து பேசுகிறீர்கள்?" என்று கோபமாக கட்டளை இட சூரியன் எதிரே வந்து நின்றார். "நான் சூரியன் இந்த சிரார்த காரியம் உங்கள் மனைவியால் சிறப்பாக செய்யப்பட்டு பித்ருக்கள் உள்ளே நுழைந்து ஆவலாக அவர்கள் கொடுத்த பண்டங்களை உண்டு அவளை ஆசிர்வதித்துவிட்டு போனார்கள். அந்த பிரசாதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல மனம் நெகிழ்ந்தார். சூரியனை வணங்கி, "சரி" என்று சம்மதித்தார். சூரியன் அந்த இடத்திலிருந்து மறைந்தார். "சந்தோஷமாக இருக்கிறது. என் மனைவியே நான் இல்லாதபோது நான் நெடுந்தூரம் போன போது சிரார்த்த காரியங்கள் செய்தாள். அவை ஏற்கப்பட்டன என்று கேட்க, மிக சந்தோஷமாக இருக்கிறது. சீதையே! நீ மிகப் பெரிய புண்ணியசாலி. இத்தனை நாள் நான் தர்ப்பணம் செய்திருக்கிறேன். மூன்று முறை சிரார்தம் செய்திருக்கிறேன். ஆனாலும் என் தகப்பனோ, என் பித்ருக்களோ என்னிடம் வரவில்லை. நான் சிரத்தையாக செய்யவில்லை போலும். ஆனால் நீ சிரத்தையாகச் செய்து அவர்கள் தரிசனத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்றிருக்கிறாய். நீ என்னைவிட பாக்கியசாலி" என்று புகழ்ந்தார். லக்ஷ்மணன் சீதையை விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். இராமரும், லஷ்மணரும் விலகிய பிறகு அவள் பல்குனி நதியை பார்த்தாள். "என்ன ஏன் பொய் சொன்னீர்கள். அட பல்குனி நதியே. நீ இனி மேலே பிரவாகித்து என்ன பயன். உன்னிடமிருந்து நீர் கொண்டு வந்து செய்த சிரார்தத்தை இல்லையென்று சொல்லிவிட்டாயே. எனவே நீ அந்தர்வாகினியாக பூமிக்கு அடியில் ஓடும் நதியாக இரு" என்று சாபமிட்டாள். பல்குனி நதி சுருண்டு கொண்டது. "தாழம்பூ புதரே. எவ்வளவு அருமையான மணம். எவ்வளவு பெரிய மடல் என்று ஆசையாக உன்னை பறித்து உன் மீது நைவேத்யம் வைத்தேனே. இப்படி தவறாக பேசிவிட்டாயே. இல்லையென்று பொய் சொல்லிவிட்டாயே. நான் தினந்தோறும் பூஜிக்கின்ற சிவன் உனக்கு ஆசிர்வாதம் தரமாட்டார். நீ அவருக்கு பிடிக்காததாக, அவர் மீது சூட்ட முடியாததாக இரு. உனக்கும், சிவனுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. ஏ பசுவே, வாய் திறந்து உண்மையை சொல்லியிருக்க வேண்டாமா. உன் வாய் எப்பொழுதுமே கோணலாகவே கிடக்கட்டும். உன்னுடைய பின்பக்கம் நல்ல பாக்கியத்தை பெறட்டும். வாய் அபாக்கியவானாக இருக்கட்டும்" என்று சபித்தாள். விளக்கு துடித்தது. "அக்னி பொய் சொல்லலாமா. அதுதானே சாட்சி. உலகத்தில் எல்லோருக்கும், எதற்கும் சாட்சியாக இருக்கக் கூடியவன். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பாலமாக இருக்கக்கூடியவன் நீதானே. உனக்கு நல்லது. கெட்டது தெரியவில்லை. உனக்கு எது சரி, தவறு என்று தெரியவில்லை. உன்னால் உண்மையாக இருக்க முடியவில்லை. நல்லது, கெட்டது தெரியாத நீ எல்லாவற்றையும் அழிப்பவனாக, எல்லாவற்றையும் உருக்குலைப்பவனாக இரு. உன்னால் நல்லவைகள், கெட்டவைகள் சகலமும் தீயட்டும். நல்லவைகளை அழித்த பாவத்தை கடைசிவரை உன் தலையில் விழுந்து கொண்டே இருக்கும்" என்று சபித்தாள். அக்னி துடித்து மெல்ல அடங்கியது. "இதுதான் கதை. சீதை செய்த சிரார்தம் ஏற்கப்பட்டது மட்டும் இல்லை. அந்த சிரார்தத்தை மறுதலித்த நான்கு பேருக்கும் கடும் தண்டனை கிடைத்தது. புரிகிறதா. பெண்கள் சிரார்தம் செய்ய முடியாது என்று எந்த அந்தணனும் சொல்ல முடியாது. உங்களுக்கு அவர்கள் உதவியாக வராவிட்டால் என்ன, நீங்களே காலையில் எழுந்து உடலை தூய்மை படுத்திக்கொண்டு ஒரு இலையில் உங்களுடைய பெற்றோர்களுக்கு வேண்டிய விஷயங்களை நீங்களே தயார் செய்து, இது உனக்காக அப்பா, இது உனக்காக அம்மா. என் மூத்தோர்களே இந்த பண்டங்கள் உங்களுக்காக, என தயார் செய்து அதை படையல் இட்டு, விழுந்து வணங்கி, "என்னால் இயன்றதை செய்தேன். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுங்கள். கண்ணீர் வடிய அவர்களை நினைத்து வணங்குங்கள். அன்று அவர்கள் வருகைக்காக காத்திருங்கள். ஏதோ ஒரு க்ஷணம் அவர்கள் உங்களை தொடுவார்கள். நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.




புதன், 27 அக்டோபர், 2021

ரமண மகரிஷியின் ஹஸ்த தீட்சை

ரமண மகரிஷியின்  ஹஸ்த தீட்சை



1908-ல் பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் இருந்து விடைபெற்று, காவிய கண்ட கணபதி சாஸ்திரி திருவொற்றியூருக்குப் பயணமானார். அங்கே, விநாயகர் கோயிலில் தங்கிக்கொண்டு, தன் தவத்தைத் தொடர்ந்தார். பிற்பகல் ஒன்றில் விழித்தபடி படுத்திருந்தபோது, அவருக்கு அருகே யாரோ அமர்வதுபோல் இருந்தது. யார் என்று பார்த்தபோது, பகவான் ஸ்ரீரமண மகரிஷி தன் உள்ளங்கையை, காவிய கண்ட கணபதியின் தலையில் அழுத்தி வைத்திருந்தார். பகவானின் உள்ளங்கை பட்டதும், கணபதி சாஸ்திரிக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்வு ஏற்பட்டது. 1908-ல் நடந்த இந்த விஷயத்தை, 1929-ல் அன்பர் ஒருவர், "கணபதி சாஸ்திரியாருக்கு திருவெற்றியூர் வந்து ஹஸ்த தீட்சை கொடுத்தீர்களாமே?" என்று கேட்டபோது, பகவான், "ஆமாம், ஒரு நாள் திடீரென்று எங்கோ இந்த இடம் விட்டு மேலே பறப்பது போல் தோன்றியது மேலே எழுந்ததும், காட்சிகள் மறைந்தன. இடம் முழுவதும் வெள்ளையாயிற்று, ஏதோ ஓர் இடத்துக்கு நகர்கிறோம் என்ற உணர்வு இருந்தது. பிற்பாடு மெல்லக் காட்சிகள் தெரிந்தன. நான் கீழே இறங்கி நின்றேன். அந்த இடம் ஒரு நெடுஞ்சாலையாக இருந்தது. அந்த இடத்தில், நான் நடந்து போனேன். அங்கே ஒரு விநாயகர் கோயில் இருந்தது. உள்ளே போய் சிறிது நேரம் யாரோடு பேசினேன், என்ன பேசினேன் என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடம் திருவெற்றியூர் என்றும், சிவன் கோயிலுக்கு அருகே இருக்கிற விநாயகர் கோயில் என்றும் மனசுக்குத் தோன்றியது. மறுபடியும் கண் விழித்துப் பார்த்தபோது, திருவண்ணாமலையில் இருந்தேன்" என்று சர்வ சாதாரணமாக, எந்தவிதக் கர்வமுமின்றி அந்த விஷயத்தை வெளிப்படுத்தினார். வான் மார்க்கமாகப் போய், தன் அன்பருக்குக் கொடுத்த ஹஸ்த தீட்சையைத் தான் தந்ததாக ஒருபோதும் அவர் சாதித்துக் கொள்ளவில்லை. தன்னால் அவ்விதம் செய்ய முடியும் என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அது பற்றி அவராக வாய் திறக்கவும் இல்லை. காவிய கண்ட கணபதி, இது பற்றி அன்பர்களிடம் சொல்லி, அந்த அன்பர்கள் வினவிய பின்பு, அதாவது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு, ‘ஆமாம், அப்படி நடந்தது’ என்று, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அதை மறைக்கவும் இல்லை; தன்னால் அப்படிச் செய்யமுடிந்தது என்று கொண்டாடிக்கொள்ளவும் இல்லை. என்னவோ அப்படி நடந்தது என்று மிக எளிமையான விஷயமாக அதைச் சொல்கிறார்.

தீபாவளி பண்டிகையின் நோக்கம்


தீபாவளி பண்டிகையின் நோக்கம்



சொன்னவர் காஞ்சி சந்திரசேகர சுவாமிகள்


தீபாவளி அன்று அமாவாஸ்யை தர்ப்பணமும் சேர்ந்து வந்துள்ளது. பித்ரு தர்ப்பணம் செய்பவர்கள் தர்ப்பணத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இல்லையே. சற்று குழப்பமாக உள்ளது. 

பொதுவாக தர்ப்பணம் செய்யும் நாளன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. ஆனால், தீபாவளி அன்று நாம் அனுஷ்டிப்பதற்கு பெயர் கங்கா ஸ்நானம் என்பதாகும். அவசியம் எல்லோரும் இதை அனுஷ்டிக்க வேண்டும்.


மஹா பெரியவா அவர்கள் இந்த கங்கா ஸ்நானத்தை பற்றி சொல்லியிருப்பதை சற்று இங்கு பார்ப்போம்:


’பிள்ளை போன நாளைப் பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். இதிலே பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். பகவானே இதற்கு ஒப்புக் கொண்டும் கூட, இப்படி சாஸ்திர விரோதமாக அப்யங்கனம் பண்ண யாராவது பயப்படப் போகிறார்களே என்று நினைத்து, பயம் போகும்படியாக என்ன செய்யலாம் என்று பார்த்தாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.”


சரி, விஷயத்துக்கு வருவோம்.


சாதாரணமாக மற்ற நாட்களில் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்போமே அந்த குளியல் மாதிரி கிடையாது இது. கங்கா ஸ்நானம் என்பது சாஸ்த்ரத்தில் எடுத்துள்ள ஒரு அனுஷ்டானமாகும். ஆதலால் அனைவரும் அதி காலையில் விதிப்படி கங்கா ஸ்நானம் செய்யலாம்.புத்தாடையும் உடுத்திகொள்ளலாம். தோஷமில்லை.

பிறகு சுமார் காலை 9 மணிக்கு பிறகு மீண்டும் குளிர்ந்த நீரில் அல்லது வெந்நீரில் ஒரு ஸ்நானம் செய்து மடியாக வஸ்த்ரம் தரித்து தர்ப்பணம் செய்பவர்கள் தர்ப்பணத்தை அனுஷ்டிக்கலாம்.



வியாழன், 16 செப்டம்பர், 2021

Who Am I - Ramana Maharishi

வேங்கடராமன் என்னும் மனிதம் எவ்வாறு ரமண மஹரிஷி என்று ஆனது.


திருவண்ணாமலை என்றால் எப்படி திருவண்ணாமலை ஈஸ்வரர் எல்லாருக்கும் தெரியுமோ அதே போல் ரமண மஹரிஷி பற்றி அறியாதவரும் இளர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் சுந்தரம் அழகம்மாள் என்னும் தம்பதிக்கு 1879-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30-ம் தேதி மகனாக ரமண மஹரிஷி அவதரித்தார். பெற்றோர்கள் அவர்களுடைய குல தெய்வ பெயரான வேங்கடராமன் என்னும் பெயரை அவருக்கு வைத்தனர்.

ரமண மகரிஷியின் பிறப்பை பற்றி பாலகுமாரன் அவர்கள் எழுதிய ஶ்ரீ ரமண மஹரிஷி என்னும் புத்தகத்தில் அழகாக கூறுவார், அதாவது "உலகில் பிரளயம் ஏற்பட்டபோது, சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த, பிரளயம் சுழித்துக்கொண்டு அந்தப் பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் சுழித்து மறைந்ததால், அது திருச்சுழி. வெகு காலத்துக்குப் பிறகு, அதே சுழியில் இருந்து பிரளயம் ஒன்று வெளிப்பட்டது. அது அன்புப் பிரளயம். ரமணானுபவம். அது பொங்கி எழுந்து உலகையெல்லாம் நனைத்தது".

அதை நிரூபிக்கும் வண்ணம் அவருடைய ஜாதகமும் இருந்தது. துலாம் லக்னம், இரண்டாம் இடத்தில் புதன் சுக்ரணுடன். ஐந்தாம் இடத்தில் குரு, சனியின் கும்ப வீட்டில். ஆறாம் வீட்டில் சனி, குருவின் வீட்டான மீனத்தில். சனியும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில். பொதுவாக குருவும் சனியும் தொடர்பு கொண்டிருப்பின் அவர்கள் ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக இருப்பர். அது போலவே சிறு வயதிலேயே வேங்கடராமன் ஆன்மீகத்தில் ஈடுபாடு உடயவராக இருந்தார். 

ஆனால், சுந்தரமய்யர் வீட்டுக்கு ஒரு சாபம் இருந்தது. உண்ண உணவும், படுக்க இடமும் கேட்ட ஒரு துறவியைப் பல தலைமுறைகளுக்கு முன்னால் விரட்டி அடித்ததால், அந்த வம்சத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் யாரோ ஒருவர் துறவியாகப் போவார் என்ற விதி இருந்தது. அதுபற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை.

சிறு வயதில் வேங்கடராமன் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கால்பந்து, கபடி, நீச்சல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

ஶ்ரீ ரமண மஹரிஷி பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை விவரித்த பாலகுமாரன் எழுதிய ஶ்ரீ ரமண மஹரிஷி என்னும் புத்தகத்தில் இருந்து சிலவற்றை பார்ப்போம். 

சிறு வயதில் வேங்கடராமனுக்கு தூக்கம் அதிகமாக வரும். ‘கும்பகர்ணா’, ‘தூங்குமூஞ்சி’ என்று அந்தச் சிறுவனைக் கடிந்து கொண்டார்கள். தூக்கம் வீட்டில் மட்டுமல்ல; வகுப்பறையிலும் வந்தது. தூங்கினால் காது திருகி, தலையில் குட்டி, ஆசிரியர் எழுப்புவார், அவமானப்படுத்துவார் என்பதால், குடுமியின் நுனியில் நூல் முடித்து, அந்த நூலை எடுத்து சுவரிலுள்ள ஆணியில் மாட்டிவிட்டு வேங்கடராமன் படித்துக்கொண்டிருப்பான். தூங்கி வழிந்தால், சட்டென்று குடுமி இழுபடும். விழித்துக்கொள்வான். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தூங்க முடியும் என்கிற வரப்பிரசாதம் இளம் வயதில் அவனுக்கு இருந்தது. 

பெரியபுராணத்தின் தாக்கம், அப்பாவின் மரணம், தான் எதற்கும் லாயக்கற்றவனோ என்ற அச்சம்... ஆகியவற்றால், தான் யார் என்ற வினா, பதினாறு வயது இளைஞனுக்குத் தோன்றியது. வேங்கடராமன் மரணம் பற்றி யோசித்தான். உயிருள்ளபோதே மரணத்தை அனுபவித்தான். எதை அறிந்தால் அறிவோ, அதை அறிந்தான்; எதை அடைந்தால் உயர்வோ, அந்த உயர்வை எட்டினான். இந்த மரண அனுபவத்துக்குப் பிறகு, என்ன செய்வது என்று வேங்கடராமனுக்குத் தெரியவில்லை. இந்த வாழ்க்கை கடும் குப்பை. சரி, இதை விட்டு எங்கே போவது? உள்ளே கேள்வி எழுந்தது. ‘அண்ணாமலை’ என்ற பெயர் தோன்றியது. இதற்கு முன் வீட்டுக்கு வந்தவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, ‘அண்ணாமலை’ என்று அவர் சொல்ல, உடம்பில் ஒரு பரவசம் தோன்றியதே, அது மறுபடியும் நினைவுக்கு வந்தது. அண்ணாமலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அது எழுந்தபோதே ஆனந்தம் பொங்கியது. யாரோ மிகத் தெரிந்தவர் அங்கு இருக்கிறார்; அவரைப் பார்க்கவேயில்லை; இப்போது போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கிளர்ந்தது. ஆனால், எப்படிப் போவது. காசு வேண்டுமே. முதலில், திருவண்ணாமலை எங்கிருக்கிறது என்று தெரியவேண்டும். மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் மார்க்கத்தைத் தேடினான் வேங்கடராமன். அது பழைய ரயில் வரைபடம். திருவண்ணாமலைக்குப் போவதற்கு ரயில் இருப்பது தெரிந்தது. திண்டிவனம்தான் திருவண்ணாமலைக்கு அருகே இருக்கிற ஊர் என்று வேங்கடராமன் நினைத்துக்கொண்டு, திருவண்ணாமலைக்குப் போக எத்தனை காசு என்று கணக்கிடும்போது, ‘மூன்று ரூபாய் இருக்கும்’ என்ற எண்ணம் வந்தது. சரி, மூன்று ரூபாய்க்கு என்ன வழி என்று யோசித்தபோது, வெளியே போய் யோசிக்கலாமே என்று தோன்றியது. "மின்சாரம் பற்றிய தனி வகுப்பு இருக்கிறது. நான் கிளம்புகிறேன்" என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, வேங்கடராமன் எழுந்தான். "அப்படியா... கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொண்டு போய் என் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டிவிடு" என்றான் அண்ணா. அண்ணாமலைக்குப் போக, காசுக்கு என்ன செய்வது என்று யோசித்தபோது, அண்ணன் மூலமாக இப்போது ஐந்து ரூபாய் கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்டான் வேங்கடராமன். திண்டிவனம் போக மூன்று ரூபாய்தானே ரயில் செலவு. அது போதும் என்று நினைத்து, வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்து, அண்ணனுக்குக் கடிதம் எழுதினான். இந்த உலகில் எழுதப்பட்ட பல கடிதங்களில் மிகச் சுருக்கமானதும், மிகச் சுவையானதுமான கடிதம் அது. சத்தியத்தில் நனைந்த வார்த்தைகள் அவை. மூன்று ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி இரண்டு ரூபாயுடன் தமையன் நாகசுவாமிக்கு தம்பி வேங்கட ராமன் கடிதம் எழுதினான்.

"என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. ஆகையால், இந்தக் காரியத்துக்கு ஒருவரும் விசனப்படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்யவேண்டாம். உன் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூபாய் 2 இதோடு இருக்கிறது". இப்படிக்கு _ -என்று எழுதி, வெறும் கோடு மட்டும் கிழித்தான். பெயர் எழுதவில்லை. துண்டுக் காகிதத்தில், பென்சிலால் எழுதப்பட்ட கடிதம் அது. இந்தக் கடிதம் எவ்வாறோ மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இப்போதும் ரமணாஸ்ரமத்தில் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


மேலும் அவரை பற்றி முழுமயாக தெரிந்துகொள்ள பாலகுமாரன் அவர்கள் எழுதிய ' ஶ்ரீ ரமண maharishi' என்னும் புத்தகம் Amazon Kindle edition இல் கிடைக்கிறது. அந்த புத்தகத்தை நீங்களும் வாங்கி  ரமணானுபவம் பெற்றிடுங்கள்.




சனி, 4 செப்டம்பர், 2021

How Krishna steals butter from gopiar's house



How Krishna steals butter from gopiar's house

Krishna used to steals butter from the hanging pot from gopiar's house. Gopiar's will get upset after seeing the empty pots. One day, as usual Krishna had an urge to eat butter from gopiar's house. So he and his friends gathered and decided to steal and eat butter from one of the gopiar's house. In tamil there is an famous saying that 'the raw mango which was stolen will have a Devine taste'  (திருட்டு மாங்கை தேனாக ருசிக்கும்). Krishna has also had the same feeling. Krishna and his friends slowly entered the chosen gopiar's house. They searched for the butterpot but it was seen nowhere in the house. Everbody got upset. Suddenly Krishna was so happy and at same time felt so sad on seeing the butterpot which was hanged so high. Krishna and his friends also felt so sad that it was hanged so high. Krishna friends gave an idea that everybody will lean back one after other above so that Krishna can step on them and get the butter pot.

Now Krishna stepped on his friends who leant back one after another. Krishna reached the butterpot which was hanged so high. There comes a surprise, there was a ring of bells which was tied with the butterpot. In order to catch Krishna red-handed, gopiar had tied the butterpot with the ringing bells. 

Now an interesting thing happens, there was a conversation between Krishna and bell. Conversation between lord (Devine living being) and Jada porul (Non Living thing)

Krishna: Bell, see i am going to eat the entire butter from this pot. You should not make sounds until I take and eat this butter.

Bell: Ok Krishna, Don't worry I will not make sound.

Krishna: Promise me, You should not make sound. Because if you make sound, gopiar's will become alert and they will catch me red-handed.

Bell: ok Krishna. I understand, I will not make sound. You don't worry. I promise you.

Krishna: Bell, see I will tell you one more thing if gopiar's catches me red handed they will handover me to my mother yashodha. After that my mom will scold me for doing such filthy things. That's why I am begging you again for not making sound until I eat.

Bell: Krishna. I understand your situation. I will not make sound until you eat.

Krishna: Now Krishna had an confidence. So he started to take one handful of butter from the pot. No sound came from the bell. He has taken the handful of butter close to his mouth. No sound came. So now Krishna happily started to put the handful of butter in his mouth. Immediately there was a big sound of 'bell ringing' came. Krishna was so astonished and shocked to hear the sound. He asked the bell why it was not able to keep the promise.

Bell: Bell said, see Krishna i was doing my duty.

Krishna: Duty? See you made loud noise. See soon, gopiar's will come and catch me red-handed.

Bell: No Krishna. See I was not making sound when you have taken a handful of butter from butterpot. Even I have not made any sound when it reached near your mouth. But when you put the handful of butter in your mouth, there comes my duty.

Krishna: Duty? What duty?

Bell: Bell continued and said 'you are lord Krishna, God of entire universe'. 

Krishna: So. 

Bell: Whenever there is a neivethiyam (food that is offered to god), it is my duty to make sound. Duty supercedes the promise which I made to you. So please forgive me for not able to keep the promise.

In Hindu religion whenever there is a neivethiyam done to god whether it is in temple or at home, people used to ring the bell and do the neivethiyam to god.

My mom used to narrates this story when I was young. She used to keep the suspense till the end. Though I was not able to narrate, I tried my best to narrate the story like her.












 

புதன், 1 செப்டம்பர், 2021

First Online Class during Vedic Period

 

Today due to covid situation, the entire world is facing issues. The education sector was one of the sector which was affected drastically. Thanks to technological era we are in. Most of the students were saved by attending online classes. Do you know people in Vedic era also attended online classes. 

How? When? Where?

Most of the people in the world know about 'Yoga' which was originated in India. Saint Patanjali who was known as the originator of Yoga which the world now is practicing. The book which is known as 'Patanjali Yogic Sutras' is said to be the foundation book for Yoga practise. It is said that saint Patanjali is the incarnation of Adisheshan (1000 heads snake) in which lord Vishnu abodes. Once upon a time Lord Vishnu was worshipping Lord Shiva's dance form in his mind. Suddenly Adisheshan felt heavy weight of lord Vishnu which he was not able to bear. He asked lord Vishnu the same. Lord Vishnu said I was seeing the lord Shiva's dance form in my mind and describes the same to adishesha. Lord Vishnu also explained because of that only he felt huge weight of him. Immediately adishesha also wanted to see lord Siva's dance form and requested lord Vishnu for the same. Lord Vishnu asked adishesha to be born in Chidambaram (Chidambaram which is the place in tamilnadu and where Lord shiva has a temple and called 'Thillai Natarajar'. Lord Shiva postrates in this temple in dance form). So adishesha was born to aathreya maharishi in Chidambaram and able to see lord shiva in dance form in chidambara temple regularly. Saint Patanjali used to take classes to his students in asariri (only voice will be heard by the students). Students will not be able to see him physically. Since, Patanjali is an incarnation of adishesha, even the breath of him will kill the person standing opposite. Because of this Saint Patanjali used to teach his students in asariri roopam. Saint Patanjali has written a book called 'Vyakarana Mahabhashyam'. To know about the 'Vyakarana Mahabhashyam', thousands of people gathered in Chidambaram Natarajar temple. Patanjali had a wish to teach this 'Vyakarana Mahabhashyam' to each and every person individually. So he decided to seat all those people who came for 'Vyakarana Mahabhashyam' in the thousand pillars hall in Chidambaram Natarajar temple. To teach this to every individual seperately at the same time he takes the form of thousand headed Adisheshan. However he had a fear that the poisonous breath of him will kill the person who sits opposite to him and listens the bhashyam. So he decided to sit behind a thick screen curtain and all the students will be sitting opposite the curtain. He has only one condition to the student that no one should remove the curtain. He started the teaching of Mahabhashyam' to everyone individually. He started to answering the questions raised by each and every person individually. His voice was so clear and attractive. 

So this was the first online class whic was taken by Patanjali Munivar during Vedic period at thousand pillar hall of Chidambaram Natarajar Temple.





திங்கள், 30 ஆகஸ்ட், 2021

குருவாயூரப்பன் கோயிலின் ஸ்ரீகிருஷ்ணர் மகிமை



 

இன்று கிருஷ்ண ஜெயந்தி, இந்நன்னாளில் குருவாயரப்பர் கிருஷ்ண கோயில் பற்றிய வரலாற்றினை காண்போம்.

பரீக்ஷித்து மன்னனின் மகனான ஜனமேஜய மன்னர் தன தந்தையின் மரணத்திற்கு காரணமான தக்ஷன் என்ற பாம்பின் மீது கோபம்கொண்டு பழிவாங்கும் நோக்கில் உலகிலுள்ள பாம்புகளை எல்லாம் பிடித்து வர செய்து, சர்ப்ப யாகம் செய்து எத்தனையோ ஆயிரக்கணக்கான பாம்புகளை கொன்றான். அந்த பாவத்தின் காரணமாக ஜனமேஜய மன்னனுக்கு குஷ்டநோய் (Leprosy) ஏற்பட்டது. மருந்து மூலமாக அவனுக்கு எந்த வித நிவாரணமும் ஏற்படவில்லை. தன் இன்உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தான். அப்பொழுது தத்தாத்ரேய முனிவர் அவர் முன் தோன்றி அவன் தொழுநோய் தீர்வதற்கான உபாயத்தை கூறினார். அது என்ன வென்றால் குருவாயூர் திருக்கோயிலில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து வந்தால் இந்த கொடிய நோயினிலிருந்து விடுபடலாம் என்பதாகும்.

மேலும் அவர் மன்னனுக்கு, குருவாயூரிலுள்ள சிலை வடிவ விக்கிரகம் நாராயணனின் ரூபம் தான் எனவும், அவரே அந்த விக்கிரகத்தை பூஜித்து வந்ததாகவும் தத்தாத்ரேயர் கூறினார். பத்மகல்பத்தின் ஆரம்பத்தில் அந்த விக்கிரஹத்தை ஸ்ரீமந்நாராயணனே ப்ரஹ்ம்மாவிடம் கொடுத்ததாகவும், அந்த திவ்ய விக்கிரஹத்தின் அருளினால்தான் ப்ரஹ்ம்மாவால் படைப்பு தொழிலை செய்ய முடிந்தது என்றும்  கூறினார். வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் சுதாபா பிருஸ்னி என்பவர்கள், பிள்ளை வரம் வேண்டி ப்ரஹ்மமாவை வேண்டினர். பிரம்மன் அந்த விக்கிரஹத்தை அவர்களிடம் கொடுத்து நீங்கள் இந்த விக்கிரஹத்தை பூஜித்து வந்தால் உங்களுடைய எண்ணம் நிறைவேறும் என்று கூறினார். அவர்களுடைய பக்தியினாலும், தூய அன்பினாலும் பகவான் மகாவிஷ்ணுவே அவர்கள் முன் தோன்றினார். அப்பொழுது அவர்கள் புத்திர பேரு கிடைக்க வரம் அருள வேண்டும் என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே நிறைவேறும் என்றார். அவர்களுக்கு மூன்று பிறவி  வரை தானே மகனாக பிறப்பதாகவும் வாக்களித்தார்.  அந்த மூன்று பிறவிகளிலும் தமது தெய்வீக விகிரஹத்தை அவர்கள் இருவரும் பூஜித்து வரலாம் என்று கூறினார். அதன்படி பிருஸ்னிக்கு ஒரு மகன் பிறந்தான், அவருக்கு 'பிருச்னி கர்ப்பன்' என்ற பெயர் சூட்டினார்கள். இரண்டாவது பிறவியில் வாமன  அவதாரம் எடுப்பதற்கு காஸ்யப முனிவருக்கும் அதிதி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். மூன்றாவது பிறவியில் வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருடைய அவதார நோக்கம் எல்லாம் பூர்த்தி அடைந்த பின் உத்தவ முனிவனிடத்தில் தான் வைகுண்டம் சென்ற பின் இந்த விக்கிரகத்தை மீட்டு தேவகுருவான பிரகஸ்பதியின் ஆலோசனைக்கேற்ப, அவர் தேர்ந்தடுக்கும் இடத்தில இந்த விகிரஹத்தை பிரதிஷ்டை செய் என்று கூறினார். மேலும் கலியுகத்தில் இந்த விகிரஹத்தை தொழுது வணங்கி, வழிபட்டு, பூசித்து வந்தால் நான் எனது ஆசிகளையும், வரங்களையும் பக்தர்களுக்கு வழங்குவேன் என்றும் கூறினார்.

கடல் நீர் கொந்தளித்து பெருவெள்ளமாக பாய்ந்து துவாரகை நகரத்தை மூழ்கடித்தது. அந்த பெருவெள்ளத்தில் அலைகளிடையே ஸ்ரீ கிருஷ்ண பகவான் பூஜித்த அந்த விக்கிரகம் மிதந்து வருவதை தேவ குருவான பிருஹஸ்பதியும், வாயு பகவானும் கண்டனர். வாயு பகவான் அந்த விகிரஹத்தை தமது தலைமீது சுமந்து கொண்டு, பிருகஸ்பதியின் அலோசனையை ஏற்று விக்கிரகத்தை ஸ்தாபித்தற்கு உரிய இடத்தை தேடி அலைந்தனர். அதே சமயத்தில் பரசுராமரும் அந்த திவ்ய விக்கிரஹத்தை  தேடி அலைந்து கொண்டிருந்தார்.

பரசுராமர், ஜமதக்கினி என்ற முனிவரின் மகன். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரையும் வெட்டி கொன்று, அந்த ரத்தத்தில் இறந்துபோன தன் தந்தையின் திலதர்ப்பணத்தை செய்வதாக அவர் சபதம் செய்திருந்தார். அந்த ரத்த தர்ப்பணத்தை செய்ய அந்தணர்கள் யாருமே முன் வராததால், அப்படி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்வதற்கு உரிய நிலத்தை அளிப்பதாக கூறினார். தன் பரசு என்னும் ஆயுதத்தை வீசி, அது எங்கு விழுகிறதோ அந்த இடத்தை எல்லாம் தானமாக அந்தணர்களுக்கு வழங்கினார். அதுவே பிற்காலத்தில் கேரள ராஜ்யமானது. அந்த காலத்தில் கேரளா தேசம் எங்கும் கீல்வாத பிடிப்பு (REHUMATOID ARTHRITIS) நோய் பரவி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள். பரசுராமர் அந்த நோய் தீர்வதற்கான மார்கத்தை நாரத முனிவரிடம் கேட்டறிந்தார். நாரத முனிவர், பரசுராமரிடம் துவாரகையில் உள்ள ஸ்ரீகிருஷ்ண விக்கிரஹத்தை இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து தொழுது வந்தால் இந்த நோயிலிருந்து மக்கள் விடுபடுவர் என்று கூறினார்.  அதன்படி பரசுராமர், கிருஷ்ண விக்கிரஹத்தை எடுத்து வந்த பிரகஸ்பதியையும், வாயுவையும் அழைத்து தன் கேரள ராஜ்யத்தில் கோவிலை நிர்மாணித்தார். குருவும் வாயுவும் சேர்ந்து கோயிலை கட்டியதால் அவ்வூருக்கு குருவாயூர் என்றும், ஸ்ரீ கிருஷ்ண விக்கிரஹத்திற்கு 'குருவாயூரப்பன்' என்ற பெயரும் வழங்கலாயிற்று. 

இத்தகைய குருவாயூர் பற்றிய கதைகள் முழுவதையும் கேட்டறிந்த ஜனமேஜய மன்னன் குருவாயூர் சென்று பக்தியுடன் அங்கேயே தங்கி குருவாயூரப்பனை மனமுறுகி தியானித்தான். ஒருநாள் இரவு ஜனமேஜய மன்னன் உறங்கி கொண்டிருக்கும் போது, அவர் கனவில் குருவாயூரப்பன் தன தலையிலிருந்து பாதம் வரை தடவி கொடுப்பது போல் கனவு கண்டான். அவன் கண்களை விழித்து பார்த்த பொழுது அவன் உடலை பீடித்திருந்த தொழு நோய் மறைந்து பரிப்பூர்ண ஆரோக்கியத்தை பெற்றதை உணர்ந்து குருவாயூரப்பன் மீது பக்தி பரவசமடைந்தான். 

 

 

 

 

  

வெள்ளி, 4 ஜூன், 2021

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 3

 CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 3 

பிரிட்டிஷ் அரச குடும்பம் CHEIRO வின் ஜோதிட நிபுணத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதற்கு காரணம் CHEIRO வின், இங்கிலாந்து மாமன்னர் EDWARD VII பற்றிய ஜோதிட கணிப்பு தான். CHEIRO 1891ஆம் ஆண்டு முதல் முறையாக ராஜா  EDWARD VII சந்தித்தார். அது ஒரு சுவாரஸ்யமான கதை. CHEIROவின் பெண் வாடிக்கையாளரான ஒருவர் CHEIROவை தன் இல்லத்துக்கு வருமாறு அழைத்தார். CHEIROவும் அவருடைய இல்லத்துக்கு சென்றார். அங்கு அந்த பெண் வாடிக்கையாளர் CHEIROவிடம் நீங்கள் எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும். நான் இங்கு திரை போட்டிருக்கிறேன், அந்த திரைக்கு பின்னால் அமர்ந்து, திரைக்கு முன்னாள் இருப்பவர் கைகளை பார்த்து ஜோதிடம் கூற வேண்டும். அவர் இதற்காகவே இங்கு பிரத்யேகமாக வந்து கொண்டிருக்கிறார் என்றார். CHEIROவிர்க்கு வருபவர் யாரென்று தெரியாது. சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூரிவிட்டு சென்றால். CHEIRO திரைக்கு பின்னால் அமர்ந்து வெளிச்சத்தை சரிபார்த்து கொண்டு, வருபவரை எதிர் நோக்கி கொண்டிருந்தார். வந்தவர் தன் கைகளை திரைக்கு முன்னாள் இருக்கும் CHEIRO விடம் காண்பித்தார். CHEIRO அவருடைய கைகளை பார்த்து முக்கியமான சில நாட்களையும் தேதிகளையும் குறிப்பிட்டு அந்த தேதிகளும் மற்றும் நாட்களும் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று கூறினார். மேலும் அவர்களுடைய வாழ்கையில் எண்கள் 6 மற்றும் 9 தொடர்புடைய கிழமையோ, நாட்களோ, மாதமோ முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று கூறினார். உதாரணத்திற்கு மார்ச் 21- ஏப்ரல் 21, ஏப்ரல் 21- மே 27, அக்டோபர் 21-நவம்பர் 27 போன்ற மேலே குறிப்பிட்ட தேதிகளில் முக்கியமான நிகழ்வுகள் உங்களை தனிப்பட்ட முறையில் பாதிக்கும் வண்ணம் இருந்திருக்கும் என்று கூறினார். அதை கேட்ட உடன் EDWARD VII அவர்கள் வியந்து, அது முற்றிலும் உண்மையகவே இருப்பதை உணர்ந்து  சற்று முன்னே வந்தது தான் தாமதம் அந்த திரையில் குத்த பட்டிருந்த ஊசி கழன்று திரை கீழ விழுந்தது. EDWARD VII அவர்களும் CHEIRO அவர்களும் நேர் எதிரே சந்தித்து கொண்டனர். CHEIRO அவர்களுக்கு சற்று பயமும் பதற்றமும் தோற்றி கொண்டது. ஆனால் EDWARD VII அவர்கள் CHEIRO விடம் நீங்கள் பயப்பட தேவையில்லை, நீங்கள் உங்கள் திரமையை அற்புதமாக வெளிப்படுத்திநநீர்கள், மேலும் முதல் முறையாக என் வாழ் நாளில் இது போன்ற விஷயங்களில் நான் முழு திருப்தி அடைந்தேன் என்று கூறினார். மேலும் EDWARD VII அவர்கள் CHEIRO விடம் நீங்கள் நான் யார் என்பதை மறந்து முன்பு போலவே நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை கூறலாம் என்றார். CHEIRO அவர்கள் சற்றே நிதானித்து மேலும் கூறலானார். அதன் பிறகு CHEIRO அவர்கள் ஒரு காகிதத்தை எடுத்து அதில் சிலவற்றை குறிப்பிட்டு எந்தெந்த வருடத்தில் மற்றும் தேதியில் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான சில நிகழ்வுகள் நடக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் EDWARD VII அவர்கள் இந்த 6ம் என்னும் 9ம் என்னும் இணையும் பொழுது என் வாழ்க்கை கடைதெருமா என்று கேட்கவும் CHEIRO அவர்கள் "ஆம்" என்று பதில் அளித்தார். அதையே EDWARD VII அவர்கள் நகைச்சுவையாக CHEIRO வை பார்க்கும் பொழுது எல்லாம் இவ்வாறு கூறுவார் "பாருங்கள் இந்த மனிதர் என்னை 69 வயதுக்கு மேல் வாழ விடமாட்டேன் என்கிறார்". CHEIRO கூறியது போல்  1841ல் பிறந்த அரசர் EDWARD VII, 1910ஆம் ஆண்டு மே மாதம் தனது 69 வது வயதில்தான் காலமானார். 

இன்னொரு சமயம் அரச குடும்பத்தை சேர்ந்த நபர்களுடய கைகளை பார்பதற்கு CHEIRO வுக்கு அழைப்பு வந்தது. CHEIRO அவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்த ஒவ்வோருவர் கைகளையும் வரிசையாக பார்த்து கொண்டு வந்தார். அப்பொழுது இளவரசர் Edward VIII (Prince of Wales) இன் கைகளை பார்த்து கூறிய விஷயம் அரச குடும்பத்தை பதர வைத்தது. அது என்னவென்றால் இந்த இளவரசர்  அரியணை ஏறினாலும் தன் காதலுக்காக மணிமுடியை துறப்பார். காதலா அல்லது ராஜ்ஜியமா என்று யோசித்தாள் இவர் காதலை தேர்ந்தெடுத்து ராஜ்ஜியத்தை துரப்பார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டனின் ஆழுமையின் கீழ் 26 நாடுகள் இருந்தது. CHEIRO அவர்கள் சொன்னது போல் EDWARD VIII 10.12.1936 அன்று தன்னுடைய காதலி Wallis Simpson என்பவருக்காக தன் மனிமுடியை துறந்தார்.

Edward VIII and Wallis Simpson on their Mediterranean holiday, 1936.

Edward VIII அவர்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டிகுள் செல்லவும்.

https://en.m.wikipedia.org/wiki/Edward_VIII

புதன், 2 ஜூன், 2021

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 2


 CHEIRO வின் சுவாரஸ்யங்கள் 

ஒரு சாயங்கால பொழுதில் ஒரு மனிதர் CHEIRO விடம் நான் உங்களை ஒரு இல்லத்திற்கு கூட்டி செல்கிறேன். அங்கே ஒருத்தருடைய கை ரேகையை நீங்கள் பார்க்க வேண்டும். அந்த கை உங்களை நிச்சயமாக ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறினார். CHEIRO வும் அதற்க்கு சம்மதித்து அவருடைய காரில் புறப்பட்டார். மேலும் அந்த மனிதர் CHEIRO விடம் நீங்கள் கை ரேகை பார்க்கும் நபரிடம் எந்தவித கேள்விகளையும் கேட்க கூடாது, ஆனால் நீங்கள் அவர்களுடைய கை ரேகையில் என்ன பார்க்கிறீர்களா அதை அப்படியே அவரிடம் கூற வேண்டும் என்று வாக்குறுதியும் கேட்டார். CHEIRO அதற்கும் சம்மதித்தார். St. Johns Wood அருகில் உள்ள ஒரு பெரிய தோட்டம் உள்ள வீட்டிற்கு முன்னாள் CHEIRO வை அழைத்து வந்த நபர் கதவு மணியை தட்டினார். ஒரு பெண் தன் தலையும், முகமும் தெரியாத வகையில் முக்காடு போட்டு கொண்டு CHEIRO விடம் தன் கையை காண்பித்தார். CHEIRO அந்த கையை பார்த்து ப்ரம்மித்து போனார். CHEIRO கவனமாக அந்த பெண்ணின் கை ரேகையை பார்த்து அவருடைய வாழ்க்கை, புத்திசாலித்தனம், லட்சியம், வெற்றி சாதனைகள், போன்றவற்றை கூறிக்கொண்டு இருக்கும் போது அந்த பெண் "Oh My God Its all True" என்று பிரெஞ்சு மொழியில் நடு நடுவே கூறினால். அந்த பெண் இறுதியில் தன் முக திரையை விளக்கினால். அந்த பெண் வேறு யாருமில்லை SARAH BERNAHARDT என்னும் பிரபலமான பிரெஞ்சு நடிகை. CHEIRO விற்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னிடம் கை ரேகை பார்பவர்களுடய கை ரேகை பதிவை அவர் வைத்திருக்கும் புத்தகத்தில் பதிவிட்டு அவர்களுடைய கையொப்பததை பெறுவார். அப்படி SARAH BERNHARDT உடைய கை ரேகையும், கையொப்பததையும் பெற்றார். அதில் SARAH BERNHARDT இவ்வாறு எழுதி இருந்தார் " கடவுள் நம்முடைய கைகளில் ரேகைகளை கொடுத்து நம்முடைய கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தெரிந்து கொள்ள வகை செய்திருக்கிறார், ஆனால் இந்த கை ரேகையை வைத்து நம்முடைய நெருங்கியவர்கள் உடைய ஆபத்துகள் மற்றும் அவர்களுடைய சோகங்கலை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடவுள் எல்லாம் நன்மைக்காகவே செய்வார்".  

SARAH BERNHARDT இந் புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன்.


CHEIRO,  SARAH BERNHARDT பற்றி  அவருடைய புத்தகமான "Languages of the Hand" இல் இவ்வாறு எழுதி இருந்தார். SARAH BERNHARDT இந் கைகள் குண்டான வட்ட வடிவிலும், கூர்மையான விரல்களுடனும் இருந்தது. இந்த மாதிரி கைகளை உடையவர்கள் உற்சாகமானவர்களாக, கலை சம்பந்த பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவருடைய கைகளில் உள்ள எல்லா ரேகைகளும் நேராக முடிகிறது. அவ்வாறு நேர் கோணத்தில் முடியும் கைரேகைகளை உடையவர்கள் வலுவான முடிவு எடுக்க கூடியவராகவும், தன்னம்பிக்கை உடையவராகவும், துல்லியமான நோக்கமுடையவராகவும் இருப்பார்கள். பொதுவாக பெரும்பாலானவர்கள் கைகளில் எதாவது ஒரு ரேகை மட்டும் நேர் முகமாக செல்லும். அனால்  SARAH BERNHARDT கைகளில் அணைத்து முதன்மையான ரேகைகளும் நேர் முகமாக செல்வது, அவர் தன் சொந்த முயற்சியில் அவருடைய வெற்றி பாதையை வகுத்து கொள்வார் என்பதை குறித்தது. இன்னொரு வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் SARAH BERNHARDT இந் கைகளில் மணிக்கட்டில் (Wrist) இருந்து இரண்டு ரேகைகள் செல்கிறது. ஒரு ரேகை மணிக்கட்டில் இருந்து இரண்டாவது விரலுக்கும் (Index finger), மற்றொன்று ரேகை மூன்றாவது விரலுக்கும் (Middle finger) செல்கிறது. இது ரொம்பவும் அரிதாக இருக்க கூடிய அமைப்பு. இரண்டாவது விரலுக்கு செல்லும் கை ரேகையை " Line of Destiny" என்று கூறுவர், ஆனால் CHEIRO அவர்கள் அதை "Line of Individuality" என்று கூறுவார். மூன்றாவது விரலுக்கு செல்லும் கை ரேகையை "Line of Success" or "Line of Sun" என்று கூறுவர். அப்படி மணிக்கட்டில் இருந்து மூன்றாவது விரலுக்கு செல்லும் கை ரேகை ஒருத்தருடைய புத்திசாலித்தனம், வெற்றி, புகழ்  போன்றவற்றை குறிக்கும். பொதுவாக பெரும்பாலான கைகளில் இந்த ரேகை இருக்காது, அப்படி இருந்தாலும் அது உடைந்தோ அல்லது அலை அலையாகவோ அல்லது தெளிவாகவோ இருக்காது. ஆனால் SARAH BERNHARDT கைகளில் அந்த ரேகை தெளிவாக இருப்பதை நாம் காணலாம். அப்படி பட்டவர்கள் வெற்றிகளை குவித்து மக்கள் மத்தியில் பிரபலயமானவர்களாக இருப்பார்கள். SARAH BERNHARDT உடைய கை ரேகை பதிவை கீழே கொடுத்துள்ளேன்.

SARAH BERNHARDT பற்றி தெரிந்து கொள்ள இந்த சட்டிக்குள் செல்லவும்  https://en.wikipedia.org/wiki/Sarah_Bernhardt





ஞாயிறு, 30 மே, 2021

Dr. Henry Meyer பற்றிய CHEIROவின் கணிப்பு

Dr.Henry Meyer

CHEIRO சொன்னபடி Dr. Meyer இன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியதா?. அதை தெரிந்து கொள்வதற்கு முன் யார் இந்த Dr Henry Meyer. என்ன குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார் என்று பார்ப்போம். Dr. Meyer என்பவர் ஒரு மருத்துவர். அவர் தன்னிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நோயாளிகளில் வசதி படைத்த நபருக்கு உயிர் காப்பீடு (Life Insurance) எடுத்து வைத்து கொள்வார். அன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு காப்பீடு உறவினர்கள் மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று இல்லை, யார் வேண்டுமானாலும்  எடுக்கலாம். அதனால் மருத்துவரான Meyer தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு காப்பீடு எடுத்து அவர்களை தான் கற்ற மருத்துவத்தின் மூலமே கொலை செய்துவிட்டு காப்பீடு தொகையை பெற்றுவிடுவார். இப்படிப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை விதிப்பது என்பது ஞாயம் தானே. இதை தான் நிருபரும் எண்ணினார். அனால் நடந்தவை என்னவென்றால். அந்த பரபரப்பான தீர்ப்பு நாளும் வந்தது. அதில் Dr. Meyerக்கு  தொழில்நுட்ப காரணத்தினால் (On Techincal Grounds), மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். CHEIROவின் கை ரேகை கணிப்பும் பலித்தது. CHEIRO, Dr.Henry Meyer என்பவர் ஒரு கொலை குற்றவாளி என்று அவருடைய கை ரேகை பதிவிலிருந்து எவ்வாறு கண்டு பிடித்தார். CHEIRO Dr.Henry Meyerஇன் கை ரேகை பற்றி இவ்வாறு கூறினார் "Line of Head or Line of Mentality" கை ரேகை அவருடைய உள்ளங்கையில் வித்யாசமாக ஓடியது. அதாவது அந்த கை ரேகை அவருடைய உள்ளங்கையில் நடுவில் ஓடியது மட்டுமல்லாமல் அது அவருடைய நாலாவது விரலை (மோதிர விரல்) நோக்கி சென்றது. பொதுவாக "Line of Head or Line of Mentality" ரேகை மூன்று விதமாக இருக்கும்,  "Line of Head or Line of Mentality", "Line  of Life" க்கு மேல்புறமாகவோ, உள்புறமாகவோ அல்லது இணைந்தோ இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு அசாதாரணமான விதத்தில் "Line of Head or Line of Mentality" Dr. Henry Meyer உடைய உள்ளங்கையில் இருந்தது என்று கூறினார். Dr. Henry Meyer உடைய கை ரேகை பதிவை கீழே கொடுத்தெள்ளேன். மேலும் CHEIRO அவர்கள் Dr. Henry Meyer மரண தண்டனையிலிருந்து எவ்வாறு தப்பிப்பார் என்று எதை பார்த்து உறுதிபண்ணினார் என்று அவர் இவ்வாறு கூறினார், "Line of Life" ரேகையில் தான் எந்த வித தடங்களையும் காணவில்லை என்று கூறினார்.

 

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் தொடரும்.





CHEIRO வின் சுவாரஸ்யங்கள்


CHEIRO


முந்தய கட்டுரையில் CHEIRO வின் கை ரேகை நிபுணத்துவத்தை பற்றி சோதித்த "NewYork World" என்ற பத்திரிகையின் நிருபர் எப்படி ஒரு கை ரேகையை பார்த்து ஒருவர் கொலை குற்றவாளி என்று இவரால் கண்டறிய முடிந்தது என்று ஆச்சர்ய பட்டார். மேலும் இவரோ மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் ஒரு கொலை குற்றவாளி. இவருக்கு எப்படி Dr. Meyerக்கு  விதிக்கப்படும் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்றல்லாம் பல கேள்வி கனைகுளுடன் CHEIRO விடம் இருந்து விடைபெற்றார். நிருபர் CHEIRO விடம் எதையும் கூறாமல் விடைபெற்றார். CHEIRO விற்கு தான் ஆராய்ந்து கூறிய கை ரேகை பதிவுகள் எல்லாம் உண்மையா என்று தெரிந்து கொள்ள ஆவல். CHEIRO நிருபரிடம் அதை கேட்டும் விட்டார். அனால் நிருபரோ இந்த கேள்விக்குண்டான பதில்களை வரும் ஞாயிறு அன்று வரும் நியூ யார்க்   "World" பத்திரிகையில்  தெரிந்து கொள்வீர்கள் என்று கூறிவிட்டு சென்றார். CHEIROவால் சனி கிழமை இரவு முழுவதும் சரியாக தூங்க முடியவில்லை. ஞாயிறு பொழுது விடிந்ததும் தன்னுடைய பணியாள் கதவை தட்டி பத்ரிக்கையினை கொடுத்தார். அதில் இவ்வாறு எழுதி இருந்தது " CHEIRO கை ரேகை படித்த படிவங்களின் நபர்களான Mayor , District  Attorney, Nicoll Ward McAllister , Dr. Meyer போன்றவர்களான வாழ்க்கை பற்றி  வெற்றிகரமாக படித்தார்" என்று கொட்ட எழுத்தில் இருந்தது.  

இப்போழுது நிருபரின் மனதில் எழுந்த கேள்வி Dr. Meyerக்கு விதிக்க படவிருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறுமா?, CHEIRO சொன்னவை பலிக்குமா?. இதை பற்றி தெரிந்து கொள்ள அடுத்த பதிவில் காணலாம்.

வெள்ளி, 28 மே, 2021

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா  

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்று நிறைய விவாதங்கள் உண்டு. அனால் அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க போவதில்லை. ஜோதிடம் என்பது ஒரு அற்புதமான கலை. அந்த கலையை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு ஐரிஷ் நாட்டை சேர்ந்த ஒருத்தர் நம் இந்திய நாட்டுக்கு வந்து அக்கலைகளில் ஒன்றான கை ரேகை சாஸ்திரத்தை கற்று உலக புகழ் பெற்றார். அவருடைய பெயர் CHEIRO. இவருடைய இயர் பெயர் William John Warner. கை ரேகை சாஸ்திரத்தை பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவருடைய கை ரேகை நிபுணத்துவம்  பற்றி சிலவற்றை இங்கு பாப்போம்.

நான் முதலில் சொன்னது போல் ஜோதிடம் உண்மையா பொய்யா என்று நம் நாட்டில் மட்டும் அல்ல உலக நாடுகளிலும் இதே நிலை தான் நிலவியது. CHEIROவை சோதிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள "NewYork  World" என்ற பத்திரிக்கை ஒரு சோதனை வைத்தது. அந்த சோதனை என்னவென்றால் ஒரு 13 மனிதர்களுடைய கை ரேகை பதிவுகளை CHEIRO விடம் கொடுத்து அவர்களை பற்றிய விவரங்களை CHEIRO தன் கை ரேகை நிபுணத்துவின் மூலம் சொல்ல வேண்டும். CHEIRO அவரிடம் கொடுத்த 13இல் ஒரு கை ரேகை பதித்த பிரதியை மட்டும் தனியாக வைத்து விட்டு மற்ற கை ரேகை பிரதிகளை ஆராய்ந்து அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய தொழில் போன்றவற்றை துல்லியமாக சொன்னார். அவரை பேட்டி எடுத்த நிருபர் ஒரு கை ரேகை பிரதி மட்டும் பாக்கி இருக்கு என்று கூற, CHEIRO இது  ஒரு கொலை குற்றவாளியின் கை ரேகை என்று கூறினார். அவரை பேட்டி எடுத்த நிருபர் அதிர்ந்து போனார். ஆம் அது ஒரு தூக்குத்தண்டனையை எதிர் கொண்டிருக்கும் ஒரு கொலை குற்றவாளியின் கை ரேகை தான். CHEIRO அவரை பற்றி இவ்வாறு தெரிவித்தார் " அந்த மனிதர் ஒரு குற்றம் இழைத்தாரா அல்லது பல குற்றம் இழைத்தாரா என்பது முக்கியமில்லை. ஆனால் இவர் தன்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் இவருடைய குற்றங்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார்". CHEIRO அதோடு மட்டும் விடவில்லை, அவர் கூறிய மற்றொரு விஷயம் நிருபரை மட்டும் அல்ல எல்லோரையும் ஆச்சர்ய படவைத்தது. அது என்னவென்றால் இந்த  கொலை குற்றவாளியின் தூக்குத்தண்டனை ரத்தாகி அவர் தன் ஆயுள் முழுவதும் சிறையில் இருந்து தன் வாழ்நாளை கழிப்பார். அந்த கொலை குற்றவாளியின் பெயர் Dr . Henry Meyer.  CHEIRO வை பற்றிய சுவாரசியங்கள் தொடரும்.



  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...