வியாழன், 11 ஜூன், 2026

காஞ்சி காமாட்சியின் அருள் லீலை- சுந்தரேஸ்வரர் கண் பார்வை பெறுதல்

 காஞ்சி காமாட்சியின் அருள் லீலை 

சுந்தரேஸ்வரர் கண் பார்வை பெறுதல் 



நாயன்மார்களில், நால்வரில் ஒருவராக போற்றுதலுக்குரிய  சுந்தரேஸ்வரர் தன் கண் பார்வையை, காஞ்சி காமாக்ஷி அம்பாளின் அருளால் பெறுதல்.

சுந்தரேஸ்வரர் தன் இடக்கண் பார்வையை  காமாட்சி தாயின் அருளால் பெறுவதற்கு முன்பு, எதனால் அவருக்கு கண் பார்வை போயிற்று என்பதை நாம் பார்ப்போம்.

சுந்தரேஸ்வரர், பிறந்தாலே முக்தி கிட்டும் திருவாரூர் என்னும் இடத்தில பிறந்தார். திருவாரூரிலே பறவையார்ன்னு ஒரு அம்மையாரை திருக்கல்யாணம் செய்து கொண்டார். அந்த அம்மையார் ருத்திர கணிகையர் குலத்திலே வந்தவர். தியாகராஜ பெருமானுக்காக ஆடிப்பாடி தொண்டு செய்யக்கூடிய உயர்ந்த ஒரு குலத்தை சேர்ந்தவள் அந்த அம்மையார். சுந்தரேஸ்வரர் அவரை திருக்கல்யாணம் செய்து கொண்டு அந்த தளத்திலேயே எழுந்தருளி இருக்கார். அங்கேயே சில அற்புதங்கள் எல்லாம் நடந்து சுவாமிகள் பல யாத்திரையாக பல சிவ தலங்களுக்கு சென்று ஈசனை தரிசித்து வருவார். அப்போ யாத்திரையாக சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருத்தளத்துக்கு வரார். அந்த தளத்திலே ஆதிபுரீஸ்வரராக சிவபெருமான் இருக்க அந்த தளத்திற்கு சுந்தரேஸ்வரர் வந்து சேர்ந்து அங்கே ஒரு காட்சியை கண்டார். கோயிலுக்கு முன்னே கன்னிமாடம்னு ஒரு பகுதி இருக்கு. அது கன்னி பெண்கள் இறைவனுக்கு தொண்டாற்றணும்னு சொல்லி விருப்பப்படுபவர்கள் அங்கே தங்கி தொண்டாற்றுவார்கள்.  அந்த மண்டபத்தை கடந்து சுவாமிகள் எழுந்தருளக்கூடிய அந்த வீதியில வரும்போது தடார்னு அந்த கன்னிமாடத்தில இருந்து ஒரு திரை விலகி ஒரு முகம் மட்டும் வெளிப்பட்டு தொடுத்த மலர்களை யாரிடமோ கொடுத்து சுவாமிகிட்ட சமர்ப்பிக்க சொல்லக்கூடிய ஒரு காட்சியை பார்த்தார். அந்த பெண்மணியும் சுந்தரேஸ்வரரை பார்க்கிறார். அந்த பெண்மணியின் திருநாமம் சங்கிலியார். அந்த பெண்ணுக்கு சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்வதுதான் வாழ்க்கையினுடைய குறிக்கோள்ன் என்று பற்றி வாழ்ந்து வருகிறாள். அந்த அம்மையார் அங்கி இருந்தபடி தியாகராஜ பெருமானுக்கு தொண்டு செய்து கொண்டு வருகிறார். சுந்தரர் நேரா திருவொற்றியூர்  தியாகராஜா பெருமான் சந்நிதி சென்று, அந்த கன்னிமாடத்தில ஒரு  பெண்ணை பார்த்தேன்னு, அவளை தனக்கு  திருக்கல்யாணம் செய்து வைக்கும்படி முறையிடுகிறார்.  சிவபெருமானும் அத அங்கீகரிக்கிறார். சங்கிலி அம்மையார் கனவுல போய் திருவொற்றியூர் வந்து இருக்கும் என் பரம தொண்டனான சுந்தரேஸ்வரரை கலயாணம் செய்துக்கும்படி கூறுகிறார். ஆனா அந்த அம்மையாருக்கு மனசுல ஒரு சின்ன எண்ணம் இவரோ பல தலங்களுக்கும் தரிசனம் பண்ணிட்டு போறார். நாம இங்க கன்னிமாடத்தில இருக்கோம். இவர கல்யாணம் பண்ணிட்டு, இவர் யாத்திரையா திரும்ப  புறப்பட்டு போயிட்டாருன்னா என்ன செய்வது என்று இறைவனிடம் முறையிடுகிறார். அதர்க்கு இறைவன் நீ சுந்தரரிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள், "அதாவது திருமணத்துக்கு பிறகு திருவொற்றியூர் விட்டு செல்ல கூடாது என்று".  அந்த அம்மையாரும் சுந்தரேஸ்வரரிடம் நாளைக்கு திருமணத்திற்கு முன் நீங்கள்  சுவாமி சன்னதியில், எக்காரணத்தை கொண்டும் திருமணத்திற்கு அப்புறமா திருவற்றியூரை விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுக்கணும்னு கேட்கிறார்.  சுந்தரருக்கு ஒரு பக்கத்துல அந்த அம்மையார் பேர்ல ஆசை எல்லாம் இருந்தாலும் திருவாரூர் தளத்தை விடுத்து அவரால இருக்க முடியாது. அதனால இது விபரீதமா இருக்கே இந்த சத்தியம்னு சொல்லி ரொம்ப யோசிச்சு சுவாமிகிட்ட போயி  இந்த மாதிரி சங்கிலி கேட்கிறாள் அதனால நாளைக்கு வந்து திருமணத்தப்போ  நான் சுவாமி சன்னதியில சத்தியம் பண்ணி தர போறேன். எனக்கு நீங்க ஒரு உபாயம் பண்ணனும். நான் சத்தியம் பண்ணி தர அந்த நொடி பொழுதுக்கு சந்நிதியில்  இருந்து புறப்பட்டு வாசல்ல இருக்கற அந்த ஸ்தல விருட்சத்தில போய் இருங்கள். நான் சத்தியத்தை நீர்  இல்லாத இடமா நினைச்சுட்டு பொய் சத்தியமா பண்ணிடுறேன். அதுக்கு அப்புறமா நீர்  திரும்பி  இந்த சந்நிதியில் வந்து இருக்கலாம்னு சொல்லவும் திருவொற்றியூர் ஈஸ்வரன் அதுக்கு சுந்தரர் கிட்ட சரின்னு சொல்றாரு. நாம் ஒன்று நினைத்தாள் இறைவன் வேறு ஒன்று நினைப்பர் அல்லவா. திருவொற்றியூர் ஈசன்  உடனே, சங்கிலியார் கனவுல போயி "நீ சுந்தரேஸ்வரரிடம் நாளைக்கு சன்னிதில எல்லாம் சத்தியம் பண்ணி தர வேண்டாம். நேரா மகிழ மரத்துக்கு  வர சொல்லி அங்க சத்தியம் பண்ணிதான்னு சொல்லி  கேள் என்று கூறுகிறார்".  கல்யாணத்துக்கு ஏற்பாடு எல்லாம் ஆகி சுவாமி சன்னிதியில இந்த சத்தியத்தை பண்ணி தர வேண்டிய கட்டம். அப்போ சுந்தரருக்கு என்னன்னா சுவாமி கிட்டதான் நம்ம சொல்லிட்டோமே அந்த சுவாமி இப்ப மகிழமரத்தடியில் இருப்பாருன்னு சுந்தரேஸ்வரர் வருகிறார். அம்மையார் அந்த இடத்துல நிப்பாட்டி இதெல்லாம் நமக்குள்ள நடக்கற தனிப்பட்ட விஷயம். இத சுவாமி சன்னிதியில வச்சு எல்லாம் பண்ணக்கூடாது. ஸ்தல விருட்சமும் சுவாமி சன்னிதானமாதான் கணக்கு அதனால நீங்க வெளியில பிரகாரத்தில மகிழமரத்தடியில சத்தியம் பண்ணி கொடுங்கன்னு கேட்கவும் சுந்தரருக்கு என்ன பண்றதுன்னு தெரியல கல்யாண அவசரம் எல்லாரும் இருக்காங்க ஆனதாகட்டும்னு போய் மகிழமரத்த அடியில ஒரு சத்தியத்தை பண்ணி கொடுத்துறார். விசேஷமா திருக்கல்யாணம் ஆகுது சங்கிலியாரோட திருவற்றியூர்ல ரெண்டு பேருமே  சிவதர்மங்கள் எல்லாம் செஞ்சுகிட்டு சுவாமி தரிசனம் பண்ணிட்டு அங்க வாழக்கூடிய ஒரு காலத்தில திடீர்னு வசந்த காலம் வருது அவருக்கு வசந்த காலம் வந்துருச்சுன்னா திருவாரூர்ல இருக்கணும். சுந்தரர் அன்னைக்கு ராத்திரியே சுவாமிட்ட சொல்லிட்டு கிளம்பிடுறார். தியாகராஜாட்ட விண்ணப்பம் பண்ணி  திருவற்றியூர்ல இருந்து கிளம்புறார். திருவற்றியூர் எல்லையை தாண்டி ஒரு அடி எடுத்து வச்சாராம். ரெண்டு கண் பார்வையும் மங்கி போய்விட்டது. நேரா அங்க இருந்து வடதிருமுல்லை  வாயில் போறார் பாசுபதா பரமேஸ்வரன் சொல்லி அந்த எம்பெருமானை பாடுறார் கண் இல்லாத நிலையிலேயே பாடுறார். அங்கிருந்து நேரா திருவண்பாக்கம் போறார். திருவண்பாக்கத்துக்கு போயி அங்க நின்னு இவர் சாமியை பார்த்து "உளிரோன்னு" கேடக்குறார். நான் இங்கதான் இருக்கேன் போயிட்டு வான்னு சுவாமி அசரீரி கூறுகிறார். அப்போ கண்பார்வை தெரியாமல் இந்த மாதிரி வந்த நிலைக்கு அவருக்கு ஒரு தண்டு கொடுத்தாராம் சுவாமி. கண்பார்வை கேட்டு வந்தா ஊன்றி நடந்து போகும்னு ஒரு தண்டை கொடுத்தாரேன்னு சுந்தரருக்கு கோவம் வேற. இப்படிய எல்லாம் அனுபவித்து கொண்டு நேரா காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளி திருக்காமக்கோட்டத்தில அருள்பலித்து கொண்டு இருக்கும்  நாயகியாக இருக்கக்கூடிய காமாட்சி அம்பிகையை தரிசனம் செய்கிறார். பிள்ளை படும் துயரை பார்த்து அவளால பொறுக்க முடியாமல் அவள் சுந்தரருக்கு அருள் பாலிக்கிறாள். மனித உடம்பில இடப்பாக கூறு அம்பிகையினுடையது அதனாலதான் இருதயம்  இங்க துடிக்குது இது சக்திங்கறதுனாலதான் இருதயத்தை சுவாமி இங்க இடது பக்கத்துல வச்சிருக்கார் இதுதான் சக்தி இது நிக்கிற மட்டும் தான் எல்லாம். அந்த சக்தி தத்துவத்தை காட்டி கொடுக்கும்வண்ணம், மேலும் ஈசனின் இடபாகம் அம்பிகைக்குரியதானபடியால இடக்கன் பார்வை சுந்தரேஸ்வரர் திரும்ப அம்பிகையின் அருளால் திரும்ப பெறுகிறார். சுந்தரேஸ்வரர் அம்பிகை வணங்குறார் ஒரு கண்பார்வை கிடைச்சிடுது நேரா கட்சி ஏகம்பத்துக்கு புறப்பட்டு போயி இந்த அனுபவத்தை முழுக்க "ஆலந்தான்கந்த அமுது செய்தானேன்னு" ஒரு பதிகத்தில பதிவு பண்ணிடுறார்.  அதுல ஆலந்தான் தமுது செய்தானை அப்படின்னு அப்படின்னு ஆரம்பித்து அந்த அந்த பதிகம் முழுவதும் அம்பிகை சிவ பூஜை செஞ்ச விஷயத்தை சொல்றார். மணலால லிங்கம் பிடித்து அம்பிகை சிவ பூஜை செய்து அந்த ஸ்தலத்தை நமக்காக ஏற்படுத்தி கொடுத்த சிறப்பை அந்த ஆலந்தான் உகந்து பதிகம் முழுக்க சொல்றார் இன்னைக்கும் அந்த பதிகம் பாராயணம் பண்ணும்போது இடக்கன் நோய் இருக்க கூடியவங்க அறுவை சிகிச்சைக்கு எல்லாம் போறவங்களுக்கு அதை ஒரு மருந்து போல சொல்றதுதான் அது நிறைய பேருக்கு பயன் கொடுத்திருக்கு மங்கி போகக்கூடிய காலத்தில எல்லாம் அது ஒரு துணையாக இருந்திருக்குன்னு பார்க்கிறோம். இந்த பதிகம் இடது கண்ணில் உள்ள கோளாறுகளை நீக்கவும், இழந்த பார்வையை பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது



காஞ்சி காமாட்சியின் வரலாறு - அன்னை ஒற்றை காலில் நின்று தவம் இயற்றுதல்.

காஞ்சி காமாட்சியின் வரலாறு 

சிவன் கண் மூடல், அதனால் ஏற்பட்ட சாபம் நீங்க அன்னை ஒற்றை காலில் நின்று தவம் இயற்றுதல்.




பார்வதி தேவி ஓரு நாள், விளையாட்டாக ஈசனின் கண்களை மூடினாள். அதன் விளைவாக மூஉலகமும் இருண்டது. படைத்தல்,  காத்தல் மற்றும் அழித்தல் அந்த ஒரு வினாடியில் ஸ்தம்பித்தது. செய்வதறியாது பார்வதி தேவி சிவனின் கண்களை மறைத்த தன் கைகளை உடனே எடுத்தால்.  இதனால் பெரும் பாபம் ஒன்று பார்வதி தேவியை சூழ்ந்தது. பார்வதி தேவி ஈசனிடம் இச்செயலுக்கான  பாப விமோசனம் என்ன என்று வினவினாள். ஈசன் பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னும் ஸ்தலத்தில் என்னை நோக்கி தவம்புரிவாயாக என்று கூறினார். தேவி பூலோகம் அடைந்து ஈசனை நோக்கி ஒற்றை காலில், ஒரு மாமரத்தின் அடியில்  நின்று கடும் தவம் புரிந்தால். மேலும் மண்ணால் ஆன ஒரு லிங்கத்தை செய்து பூஜித்தும் வந்தால். ஈசன் அன்னையின் தவத்தை சோதிக்க எண்ணி வேகவதி என்னும் 
ஆற்று வெள்ளம் பெருகும்படி செய்தார். அன்னை பார்வதி தேவி மண்ணால் தாம் அமைத்த லிங்கம் எங்கு ஆற்று வெல்ல நீரில் அடித்து சென்றிடுமோ என்று கலங்கி மண்ணால் ஆன லிங்கத்தை இருக ஆலிங்கனம் செய்து கொண்டால். ஈசன் அன்னையின் பக்தியையும், தவத்தையும் மெச்சி அன்னைக்கு காட்சி கொடுத்து ஆட்கொண்டார். இன்றும் காஞ்சியில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தில் அன்னை ஆலிங்கனம் செய்த வடுவை காணலாம். எந்த மாமரத்தினில் அடியில் அன்னை தவம் புரிந்தாலோ, அந்த மாமரம் தலவிருக்ஷமாக ஏகமபெரேஸ்வரர் கோயிலில் இன்றும் இருப்பதை நாம் காணலாம். அந்த மாமரம் 3500 வருட பழமைவாய்ந்த மரம் என்று  கூறப்படுகிகிறது. மேலும் அம்மரத்தில் உள்ள நான்கு கிளைகளில் இருக்கும் மாங்கனி வெவ்வேறு விதமாக சுவைக்க கூடியதாக இருக்கும் என்று செவி வழி செய்தி. 




ஏன் காஞ்சியில் இருக்கும் அணைத்து சிவாலயங்களிலும் அன்னைக்கு தனி சந்நிதி இல்லை?

காஞ்சி காமாட்சியின் வரலாறு 


ஏன் காஞ்சியில் இருக்கும் அணைத்து சிவாலயங்களிலும் அன்னைக்கு தனி சந்நிதி இல்லை? இந்த காஞ்சிபுர எல்லைக்கு வெளியில் இருக்கும் ஒவ்வொரு சிவா ஆலயத்திலும் அம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கும். ஒரு காலத்தில் கைலாசம் முதலிய எல்லா உத்தம கோயில்களில் இருந்த அம்பிகை,  தன்னுடைய ஷக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி காயத்ரி மண்டபம் அடியில் உள்ள குகையில் இருக்கும் பீடத்தில் ஆகாய வடிவமாக அமர்ந்தாள். பிறகு ப்ரம்மா தவம் செய்து பிரார்த்திக்க, அந்த பிரார்த்தனைக்கு இணங்கி அன்னை தனது சக்தியை எல்லா உத்தம க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி அங்கு சாந்நித்யமாக இருக்குமாறு அனுகிரகம் செய்தால். ஆனால் எல்லா சக்திகளையும் தன்னுள் அடக்கிய அடையாளத்துக்கு சான்றாக இந்த காஞ்சிபுர எல்லைக்குள் இருக்கும் சிவாலயங்களில் மாத்திரம் தனது சக்தியை அனுப்பாமல் காமக்கோட்டத்தில் உள்ள பிலகாசத்திலே தனது சக்தியை நிறுத்தி, தன்னை வேண்டி வரும் பக்தர்கள் அனைவருக்கும் தன்  அருள் கடாக்ஷத்தை வாரி வழங்குகிறாள்.

காமாட்சியின் அருள் லீலை - மூகர்

காஞ்சி காமாட்சியின் வரலாறு 

காமாட்சியின் அருள் லீலை - மூகர் 



 

வாழ்க்கை அற்புதங்களாலும் தெய்வீகத் தலையீடுகளாலும் நிறைந்தது. தட்சிணப் பாதையில், வித்யாவதி என்ற ஒரு அறிஞர், பிறவியிலேயே காது கேளாத மற்றும் பேச முடியாத ஒரு அசாதாரண மகனைப் பெறும் பாக்கியம் பெற்றார். மாற்றுத்திறனாளி யான அந்த மகனுக்கு சங்கரர் என்று பெயரிடப்பட்டது. பெற்றோரின் பாண்டித்தியம் (கல்வி அறிவு) அவனுக்குப் போய்ச் சேரவில்லை. சங்கரர் 'மூகர்' (ஊமை) என்பதால், அவர் 'மூக சங்கரர்' என்று அழைக்கப்பட்டார். அவர் தினமும் காமாட்சி அம்மன் சன்னிதியில் வந்து அமருவார். மற்றொரு பக்தரான ஸ்ரீ வித்யா உபாசகர் என்பவரும், கல்வி மற்றும் சொல்லாற்றலுக்காகப் பிரார்த்தனை செய்ய அங்கே வருவார். அந்த பக்தரின் ஆசை அவ்வளவு தீவிரமாக இருந்ததால், அன்னை மனித உருவில் தோன்றினாள். அவள், தாழ்வாரத்தில் அருகருகே அமர்ந்திருந்த அந்த இருவரையும் நோக்கிச் சென்றால். தேவியின் தரிசனத்தை விரும்பிய அந்தச் சாதகன், தங்களை நோக்கி நடந்து வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான்; அவள் வெற்றிலை மென்று கொண்டிருப்பதையும் கண்டான். அன்னை தன வாயினால் சுவைத்த வெற்றிலை தாம்பூலத்தை, சன்னதியில் அமர்ந்து இருந்த சாதகனுக்கு முதலில் சென்று "வேண்டுமா" என்று முக பாவனை செய்தால். அன்னை தேவியின் தரிசனத்தை மிகவும் தீவிரமாக விரும்பி, தேவியைத் தன் பக்கம் இழுக்கும் அளவுக்கு பக்தி கொண்ட அந்த பக்தன், அன்னையின் அந்த வெற்றிலை தாம்பூலத்தை ஏற்க மறுத்தான். அன்னை தன கருணை பார்வையை பக்கத்தில் அமர்ந்து இருந்த மூக சங்கரரை நோக்கினால். தேவி உடனடியாக அந்தத் தாம்பூலத்தை மூக சங்கரருக்கு வேண்டுமா என்று முக பாவனையில் கேட்டால். அதற்க்கு உடனே மூக சங்கரர் வேண்டும் என்னும் விதமாக தன் நாக்கினை நீட்டினார். தேவி உடனடியாக அந்தத் தாம்பூலத்தை மூக சங்கரருக்கு வழங்கினார். உடனடியாக அவர் தேவியை போற்றித் துதித்து இயல்பாகவே கவிதை பாடத் தொடங்கினார். அவர் ஐந்து 'சதகங்களை' (நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புகள்) தங்கு தடையற்ற ஓட்டத்துடன் இயற்றினார். இவற்றில், ‘பாதாராவிந்த’ சதகம் அன்னையின் தெய்வீக பாதங்களை மையமாகக் கொண்டது. ‘மந்தஸ்மிதா’ சதகம் தேவியின் அழகிய புன்னகையை மையமாகக் கொண்டது. ‘கடாக்ஷா’ சதகம் தேவியின் ஆசீர்வாத பார்வையில் கவனம் செலுத்துகிறது. பின்னர், காமாக்ஷி பரதேவதையால் அற்புதமாக ஆசீர்வதிக்கப்பட்டதால், காஞ்சிபுரத்தின் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இருபதாவது பீடாதிபதியாக மூக சங்கரர் நியமிக்கப்பட்டார். 

காஞ்சி காமாட்சியின் வரலாறு - லலிதா திருபுரசுந்தரி தேவர்களுக்கு இட்ட கட்டளை

 காஞ்சி காமாட்சியின் வரலாறு 

லலிதா திருபுரசுந்தரி தேவர்களுக்கு இட்ட கட்டளை 




காஞ்சி காமாட்சியின் கட்டளைக்கிணங்க, தேவர்கள் பந்தகாசுரனை, தேவி தன் சுண்டு விரலால் கீறி காட்டிய இடத்தில புதைத்தனர். புதைத்த இடத்தில ஜெயஸ்தம்பம் ஒன்றையும் காமாக்ஷி அம்மனின் கட்டளையை ஏற்று நட்டனர் . மேலும் தேவர்கள்  24 அட்சரங்களை கொண்ட காயத்ரி மந்திரத்தை குறிக்கும் வண்ணமாக 24 தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்றையும் கட்டினார்கள். பிறகு தாங்கள் தரிசித்து பாக்கியம் பெற்ற அன்னையின் திருவுருவத்தை சிலையாக செய்து, பிரணவ மந்திரத்தை குறிக்கும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அன்னையின் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். பின்னர் தேவர்கள், அன்னையின் ஆணைக்கு இணங்க கதவை மூடிவிட்டு வெளியே வந்து அமர்ந்து, அன்று இரவு முழுவதும் அன்னைக்கான மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்து கொண்டிருந்தனர். மறுநாள் விடியற்காலைக்கு சற்று முன்பு, தேவர்கள் மிகுந்த பக்தியுடன் கதவை திறந்த பொது, அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் அன்னை ராஜா ராஜேஸ்வரியாக காட்சி கொடுத்தால். காஞ்சியில் உள்ள காமகோட்டத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில், ஸ்ரீ காமாக்ஷி தேவியின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, தேவர்களின் தலைமைச் சிற்பியான விஸ்வகர்மா ஒரு பல்லக்கையும், பிரம்மதேவர் முத்துக்களால் ஆன ஒரு சிகை அலங்கார ஆபரணத்தையும், மகாவிஷ்ணு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு கிரீடத்தையும், சிவபெருமான் ஸ்ரீ சக்கரம் என்றழைக்கப்படும் ஒரு ஆரத்தையும் வழங்கினர். அவர்கள் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் திருவுருவச் சிலைக்கு அனைத்து ஆபரணங்களையும் அணிவித்து, அவளை வழிபட்டு, காஞ்சியில் உள்ள இந்தத் தலத்தைப் புனிதப்படுத்தி, இனிவரும் எல்லா காலங்களிலும் பக்தர்களுக்குத் தனது அருளைப் பொழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.


காஞ்சி காமாட்சியின் அருள் லீலை- மஹாலக்ஷ்மி அருஉருவ சாபத்தில் இருந்து விடுபடுதல்

 காஞ்சி காமாட்சியின் அருள் லீலை 

மஹாலக்ஷ்மி  அருஉருவ சாபத்தில் இருந்து விடுபடுதல்



 திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ​​ஆமையாக உருவெடுத்து, மந்தார மலையைத் தன் முதுகில் தாங்கியிருந்த வெண்ணிறத் திருமேனியுடைய விஷ்ணு பகவான், ஹாலாஹல விஷத்தின் கொடிய வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, அவரது திருமேனி கருமை நிறமடைந்தது. பாற்கடலில் இருந்து தோன்றிய லட்சுமி தேவியை தேவர்கள்  விஷ்ணு பகவானுக்குத் திருமணம் செய்து வைக்க முன்வந்தனர். தனது பளபளப்பான பொன்னிற மேனிக்கு பெயர் பெற்ற லட்சுமி தேவி, ஒருமுறை விஷ்ணுவின் கருமையான நிறத்தைக் கேலி செய்து, அவர் தனக்குச் சமமானவர் அல்ல என்று வேடிக்கையாகக் கூறினார். தனது அழகான நிறத்தைப் பற்றிய எண்ணத்தால் ஏற்பட்ட அவளது கர்வத்தை அடக்க  விஷ்ணு பகவான், மஹாலக்ஷ்மி தனது அழகை இழக்க வேண்டும் என்று சபித்தார். விளையாட்டுத்தனம்கூட சில சமயங்களில் துயரமாக மாறக்கூடும் என்பதையும், மிகவும் நெருக்கமான மற்றும் அன்பானவர்களிடம் பேசும்போதுகூட ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உலகுக்குக் காட்ட இது ஒரு உதாரணமாகும். இதனால் லட்சுமி மிகவும் மனவேதனை அடைந்து, தான் இழந்த அழகை மீண்டும் அருளுமாறு ஸ்ரீ காமாட்சி தேவியிடம் பிரார்த்தனை செய்தாள். ஸ்ரீ காமாக்ஷி அவளுக்கு ஆறுதல் கூறி, காஞ்சிபுரத்தில் உள்ள காமகோட்டத்தின் காயத்ரி மண்டபத்தில் அமைந்துள்ள தனது சன்னதிக்கு இடதுபுறத்தில் இருக்குமாறு பணித்தார். அதன் மூலம், அவளுடைய பக்தர்கள் அவளுக்குக் குங்குமப் பிரசாதத்தை வழங்கி, அதை அவளுக்கே மீண்டும் சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் மகிமையால் அவள் தனது அழகிய உருவத்தை மீண்டும் பெறுவாள் என்றும் கூறினார். அதற்குப் பதிலாக, தான் அவர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வழங்குவதாக அவள் லட்சுமியிடம் கூறினாள். லட்சுமி தேவி அவளது விருப்பத்திற்கு இணங்கி, தனது அழகிய வடிவத்தை மீண்டும் பெற்றாள். இவ்வாறு அருவ லட்சுமி, சௌந்தர்ய லட்சுமியாக மாறினாள்.

விஷ்ணு பகவானும், அவசரத்தில் தனது பத்தினியான ஸ்ரீ லட்சுமியை சபித்ததில் தான் செய்த தவறை உணர்ந்து, அவளைச் சமாதானப்படுத்துவதற்காக காஞ்சிக்கு வந்தார். காயத்ரி மனபாத்தில், லட்சுமி தேவியின் அழகான திருஉருவை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அவளுக்குத் தெரியாமல் பார்க்க விஷ்ணு விரும்பினார். அவர் அவளை நோக்கி ரகசியமாகச் சென்றபோதிலும், அவள் அவரை கவனித்துவிட்டாள். காமாட்சி தேவியின் பாதுகாப்பில் இருக்கும் தைரியத்தால், தன்னைத் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவை அவள் 'கள்வன்' அதாவது 'திருடன்' என்று அழைக்கும் துணிச்சலையும் கொண்டிருந்தாள். அதனால், காயத்ரி மண்டபத்தில் சௌந்தர்ய லட்சுமிக்கு அருகில் எழுந்தருளியிருந்த விஷ்ணு பகவான், 'கல்வர்' என்று அழைக்கப்பட்டார். கல்வர் சன்னதியானது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும், மேலும் திருமங்கை ஆழ்வார் இந்தத் தெய்வத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.


காஞ்சி காமாட்சியின் வரலாறு- காஞ்சி காமகோடி என்று அழைப்பதற்கான காரணம்

 காஞ்சி காமாட்சியின் வரலாறு 



திருவாரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையானை நினைத்தாள் முக்தி, காசியிலே பிறவி பிணி முக்தி. காஞ்சியில்? ஆம் காஞ்சியில் ஒரு நாழிகை வாழ்ந்தால் கூட முக்தி.

காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் காமாக்ஷி, தன் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளி தருபவளாக இருக்கிறாள். சக்தி, தாக்ஷயினியாக இருந்த போதில் ஈசனின் உத்தரவை மீறி தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்டால். தக்ஷன் ஈசனுக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை கொடுக்காததை கண்டு கோபம் கொண்டு அந்த யாக அக்கினியிலே குதித்தாள். ஈசன் அந்த செய்தியை கேள்வியுற்று தாக்ஷயிணியின்  உடலை தலை மேல் தூக்கி ஆடினார். அப்படி ஆடும் பொழுது அன்னையின் ஒவ்வொரு பாகமும் பூமியில் ஒவ்வொரு இடத்தில விழுந்து அது ஷக்தி பீடமாக மாறியது. அவ்வாறு அன்னையின் நாபி அதாவது வயிற்று பகுதி காஞ்சி மாநகரில் விழுந்தது. தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு எவ்வாறு தாயின் நாபி  கொடி மூலம் தாய் உண்ணும் உணவின் போஷாக்கு சென்றடைகிறதோ, அது போல அன்னை பூதேவி, காஞ்சியில் அமர்ந்து உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசியையும் போஷித்து, வளர்த்து ரக்ஷித்து வருகிறாள். 

இந்த க்ஷேத்ரத்தை காஞ்சி காமகோடி என்று அழைப்பதற்கான காரணம், இந்த க்ஷேத்ரத்தில் எவன் ஒருவன் தன் ஆசைகள் நிறைவேற தான,  தர்மங்களை செய்கிறானோ அந்த தான தர்ம பயன்  கோடி கோடியாக வளரும் என்று ஸ்ரீ காமாக்ஷி மஹாத்மயத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக ஒரு நிகழ்வும் நடந்தது. முன்பொரு காலத்தில் பிரம்மன் ஆதி சக்தியை காஞ்சியில் பூஜித்து வந்தார். பூஜையின் முடிவில் தாமரை பூ ஒன்றை வான் நோக்கி எறிந்தார். அது ஒரு மானுடனாகி பிரமனை வணங்கியது. ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்ததால் ஆகாச பூபதி என்று பெயரிட்டார் ப்ரம்மா. அவனிடம் காஞ்சி மாநகரின் ஆட்சியை கொடுத்தார் ப்ரம்மா. அவனும் காஞ்சியை  செவ்வனே ஆட்சி புரிந்து வந்தான்.

ஆகாச பூபதி பிள்ளை வரம் வேண்டி, அம்பாளை பிரார்த்தித்தான். அம்பாளும் ஆகாச பூபதிக்கு இறங்கி, விநாயகரையே அவனுக்கு பிள்ளையாக பிறக்க கடவது என்று அருளினால். அந்த குழந்தையின் பெயர் துண்டீரன். துண்டீரனின் நாம கரண  விழா சிறப்பாக நடைபெற்றது. அன்னதானம் மிக பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. அங்கே தேவியும் வந்து உணவு அருந்தினால். சற்று நேரத்தில் அங்கே பொன்மழை பெய்தது. ஆகாச ராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் தீடிர் என்று பொன்மழை பொழிகிறது? என்ன காரணத்தினால் என்று புரியவில்லை. அப்பொழுது கணபதியின் அம்சமான துண்டீரன் எனக்கு பொன்மழை ஏன் பொழிந்தது என்று தெரியும் என்று கூறினார். அன்னதானத்திற்கு தேவையான  பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று ராணி சோதிக்கும்போது, அவளுடைய கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்து ஒரு சிறிய பொன்னாலான முத்து பருப்பில் விழுந்தது. அந்த பருப்பில் சமைத்த உணவில் உள்ள அந்த சிறிய பொன்முத்து சக்தியாக வந்து உண்ட தாயின் வாயில் சென்றது. அதுதான், இங்கு பொன்மழை பெய்ய காரணம். அவள் வேறு யாரும் இல்லை காமாக்ஷி தேவி. காமாக்ஷி தேவி தன் பக்தர்கள் ஆத்மார்த்தமாக கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் பல மடங்கு பெருக்க கூடியவள், அதனாலே அந்த க்ஷேத்ரத்துக்கு "காஞ்சி காமகோடி" என்று பெயர் வந்தது. 

காஞ்சியில் துண்டீர மகாராஜாவுக்கு தனி சந்நிதி உள்ளது. 





பூத நாராயனர் வரலாறு

காஞ்சி காமாட்சியின் வரலாறு 

பூத நாராயனர் வரலாறு 



நாராயணர் மல்லகன் என்னும் அசுரனடன் கடுமையாக போர் புரிந்தார். நாராயணர் போர் புரியும்போது மல்லகனின் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு ரத்தமும் இன்னொரு அசுரனாக உருவாகி நாராயனுடன் போர் புரிந்தது. நாராயணர் பல ஆயிர கணக்கான அசுரனுடன் போர் செய்து களைத்து செய்வதறியாது சிவனிடம் முறையிட்டார். சிவன் தன்னுடைய ஜடா முடியில் இருந்து இரண்டு பூத கணங்களை உருவாக்கி மல்லகனிடம் போர் புரிந்து வெற்றி பெறும்படி ஆணை இட்டார். அந்த இரு பூத கணங்களும் மல்லகனுடன் போர் புரிய தொடங்கின. மல்லகனின் ரத்தத்தில் இருந்து இன்னொரு அசுரன் உருவாவதை உணர்ந்து, இரு பூத கணங்களும் மல்லகனின் ரத்தம் சிந்தாதவாறு, அதை குடித்து போரிட்டு வெற்றி பெற்றது. ஆனால் அசுரனின் ரத்தத்தை பூதகணங்கள் குடித்ததினால், செய்வதறியாது நாராயணனை தாக்கியது. நாராயணரும் இந்த பூதகணங்கள் ஒரு நல்ல காரியத்துக்காக சிவனின் ஜடாமுடியில் இருந்து தோன்றின. இவைகள் அசுரன் ரத்தத்தை குடித்ததினால் இவ்வாறு தாக்குகிறது என்பதை உணர்ந்து அவ்விரு பூத கணைகள் மீதும் நின்று, அமர்ந்து மற்றும் படுத்து, அந்த பூத் கணங்களை தன் சுய கட்டுப்பாட்டிற்கு நாராயணன் கொண்டு வந்தார். பூத கணங்கள் நாராயணரையே நாம் தாகக்கிவிட்டோமே, இந்த பாவத்தை எப்படி போக்குவது என்று சிவனை பிரார்த்தித்து. மேலும் நாராயணனும் சிவனின் பூத கணங்களை தாக்கியதற்காக மனம் வருந்தி சிவனை வேண்டலானார். சிவன் அவர்கள் முன் காட்சி கொடுத்து தன்னுடைய ஐந்து தலையில் இருந்தும் கங்கையை பொழியும்படி செய்து ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அந்த தீர்த்தத்தில் நீராடி பூதகணங்களை தங்கள் பாபத்தை போக்கி கொள்ளும்படி ஆணையிட்டார். பந்தகாசுரனின் ரத்தத்தை குடித்து சுயநினைவு இழந்த பூதகணங்களை நாராயணர் அடக்கி தன சுய நினைவுக்கு கொண்டு வந்ததால் இத்தலத்தில் "பூத நாராயணர்" என்று அமர்ந்த கோலத்திலும், நின்ற கோலத்திலும் மற்றும் சயன கோலத்திலும் நாராயணர் அருள் பாலிக்கிறார். 

காஞ்சி காமாட்சியின் வரலாறு - பந்தகாசுரன் என்னும் அசுரனை அன்னை வதம் செய்தல்

 காஞ்சி காமாட்சியின் வரலாறு 

பந்தகாசுரன் என்னும் அசுரனை அன்னை வதம் செய்தல் 



தேவர்கள் கிளியின் உருவம் கொண்டு லோகமாதாவை பல யூகங்கள் கடந்து தவம் இயற்றினார்கள். அன்னையும் தேவர்கள் படும்  துயரத்தை கண்டு மனமுருகி பந்தகாசுரனை வதம் பண்ண அவதரித்தாள். தேவி ஒரு 9 வயது சிறு பாலகியாக, அவதரித்தாள். தேவர்கள் அந்த பாலா திருபுரசுந்தரியை வணங்கி தங்கள் துயரத்தை கூறினார்கள். அங்கிருந்த 9 வயது பாலா திருபுரசுந்தரியை விடைபெற்று, அஷ்டபுஜங்கள் கூடிய துர்கையாய் உருமாறி பந்தகாசுரனை வதம் செய்ய புறப்பட்டாள். தேவி துர்கை பந்தகாசுரனுடன் போர் செய்து அவன் தலையை கொய்து நேரே தேவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கினாள். மீண்டும் 9 வயது பாலா திருபுரசுந்தரியாக உருவெடுத்து பந்தகாசுரனின் தலையை புதைக்க ஒரு இடத்தை தன் கால் கட்டை விரலால் கீறினால். அந்த இடத்தில பந்தாசுரனின் உடலை புதைக்கும்படி தேவர்களுக்கு ஆணை இட்டால். மேலும் புதைத்த அந்த இடத்தில தன்னுடைய வெற்றிக்கு அடையாளமாக ஜெயஸ்தம்பம் நடும் படி கட்டளையிட்டு மறைந்தாள். தேவர்களும் அன்னையின் ஆணையை ஏற்று, அன்னை காட்டிய இடத்தை தோண்டினார்கள். தோண்டிய அவ்விடத்தில் மல்லகண்  என்னும் அசுரன் கடும் தவம் இயற்றிக்கொண்டு இருந்தான். தேவர்களுக்கு மறுபடியும் என்ன செய்வதென்று புரியவில்லை, நாராயணா! நாராயணா! என்று அலறினர். நாராயணர் அவர்களுக்கு காட்சி கொடுத்து மல்லகனுடன் போர் புரிய துவங்கினார்.


காஞ்சி காமாட்சியின் வரலாறு - சிவன் காஞ்சி க்ஷேத்திர மஹிமையை தேவர்களுக்கு உரைத்தல்

 காஞ்சி காமாட்சியின் வரலாறு

சிவன் காஞ்சி க்ஷேத்திர மஹிமையை தேவர்களுக்கு உரைத்தல் 




பந்தகாசுரன் என்னும் அசுரன் பிரம்மனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். பிரம்மனும் அவனுடைய தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். என்ன வரம் வேண்டுமோ கேள், பந்தகாசுரா என்று பிரம்மன் அருளினார். பந்தகாசுரன் பிரளயம் வரும் வரை தனக்கு அழிவு வர கூடாது என்று வரம் வேண்டினான். பிரம்மனும் அவ்வாறே ஆகட்டும் என்று வரம் அருளினார். பிரளயம் வருவதற்கு வெகு யுகம் இருக்கிறது என்பதை அறிந்த பந்தகாசுரன் தேவலோகத்தை கைப்பற்றி தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பந்தகாசுரனுக்கு பயந்து இமயமலையில் உள்ள ஒரு குகை வடிவ பிலத்திற்குள் சென்று ஒளிந்துகொண்டனர். அந்த குகை வடிவ பிலத்தில் வேதனையோடு தேவர்கள் நடந்து செல்லும்போது குகையின் வெளிப்புற வாயிலை அடைந்தனர். அந்த வெளிப்புற வாயிலின் இறுதியில் ஈசன் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தார்.  

இது என்ன வினோதம்! ஈசன் இமயமலையில் இல்லாமல் இந்த பிலத்தில் தவம் புரிந்து கொண்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஈசன் தன ஆழ்ந்த தவத்தில் இருந்து கண் விழித்து பார்த்தார். தேவர்கள் கவலை தோய்ந்த முகத்தில் இருப்பதை கண்டு, என்ன கவலையாக இருக்கிறீர்கள்? என்று ஈசன் வினவினார். தேவர்களும் பந்தகாசுரனால் தாங்கள் அனுபவித்த துன்பங்களை கூறி இறைவனிடம் புலம்பினர். மேலும் பந்தகாசுரனுக்கு பயந்து எங்கு போவது என்று அறியாமல் இந்த குகை வடிவ பிலத்திற்குள் பித்து பிடித்தது போல் வந்து கொண்டிருந்தோம் என்று கூறினர்.

ஈசன் அவர்களை பார்த்து புன்முறுவல் செய்து, நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள். இந்த பிலம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு இடம். இந்த இடத்தில நானே பல ஆண்டுகளாக தவம் செய்து சாப விமோசனம் பெற்றேன். நீங்களும் இந்த பிலத்தில் அமர்ந்து லோகமாதாவை தியானித்து தவம் இயற்றுவீர்களாக என்று கூறினார். தேவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, உலகையே காத்து ரட்சிக்கும் ஈசனுக்கே சாபமா?, தேவர்களின் தலைவன் ஈசனிடம் வினவினான். ஈசனும் தான் சாபம் பெற்ற கதையை கூறினார்.

முன்பொரு சமயம் ரிஷிகள் யாகத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து அதனுடைய சாராம்சத்தை மறந்தனர். அந்த ரிஷிகளின் அங்காரத்தை அடக்க ஈசன் பிக்ஷடனர் வடிவிலும், விஷ்ணு பகவான் மோஹினி வடிவத்திலும் அந்த ரிஷிகள் நடத்தும் யாக சாலைக்குள் நுழைந்தனர். ரிஷி முனிகள் அந்த அனுஷ்ட யாக சம்பிரதாயத்தில் மூழ்கி, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்து யாகம் செய்து கொண்டிருந்தனர். இந்த இடம் உத்தரகாண்டில் உள்ள ஜகேஸ்வர் என்னும் இடத்தில நடந்து கொண்டிருந்தது. அந்த ரிஷிகளின் பத்தினிகள் பிக்ஷடனரின் சுந்தர வடிவில் மெய் மறந்து அவரையே பார்த்து கொண்டிருந்தனர். எவர் தான் அவர் அழகில் மயங்காதவர் உண்டு? அவரே சுந்தரேஸ்வரர் அல்லவா! உடனே அந்த ரிஷிகள் இதனை கவனித்து, நம் மனைவியருக்கு சுய கட்டுப்பாடு என்பதே இல்லை, அந்த பிக்ஷடனரை வைத்த கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கின்றனர். உடனே அந்த ரிஷிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஈசனை தாக்கினர். இறுதியில்  ஈசன் அவர்களை வென்று நடராஜ கோலத்தில் அவர்களுக்கு காட்சி அளித்தார்.  ரிஷிகளும் அவர்களுடைய அகங்காரத்தை விட்டொழித்து ஈசனை வணங்கினர். ஆனால், ரிஷிகள் தன்னுடைய பத்தினிகள் அனைவரும் ஈசனுடைய சுந்தர அழகில் மயங்கி  தங்களுடைய தர்மத்தை ஒழுங்கக செய்யாத காரணத்தினால், ஈசனுக்கு "தன்னுடைய சுந்தர அழகும், தன் கம்பீரமான ஆண்மை தோற்றமும் இழக்கட்டும்" என்று சாபம் அளித்தனர். ஈசன் அந்த சாபம் போக்கவே இந்த பிலத்தில் கடும் தவம் இயற்றியதாக கூறினார். இப்பொழுது தேவர்கள் இந்த இடத்தில் அப்படி என்ன மஹிமை இருக்கிறது என்று வினவினார்கள். அதற்க்கு ஈசன் இந்த பூமி கோவடிவம் கொண்டது. கோவின் முகம் "கோமுக்" என்னும் க்ஷேத்திரமாகும், கோவின் தொண்டை பகுதி "இமாலயம்" என்னும் க்ஷேத்திரமாகும், வயிற்று பகுதி "கேதார்நாத்" என்னும் க்ஷேத்திரமாகும், கோவின் தலை பகுதி "ஸ்ரீபுரம்" என்னும் க்ஷேத்திரமாகும், முதுகு பகுதி "வாரணாசி" என்னும் க்ஷேத்திரமாகும், வால் பகுதி "திருவாரூர்" என்னும் க்ஷேத்திரமாகும். நாம் அனைவரும் நின்று கொண்டிருக்கும் இந்த பிளம் கோவினுடைய நாபி பகுதி ஆகும். இந்த இடத்தில் இருந்து தான் அவள் இந்த பூமியில் உள்ள அணைத்து ஜீவராசிகளையும் போஷித்து வருகிறாள். அதுவே இந்த இடத்தின் மஹிமை என்று கூறினார். இப்பொழுது நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள், இங்கு நீங்கள் அனைவரும் லோகமாதாவை நினைத்து யோக சாதனம் செய்யுங்கள், அவள் உங்களுக்கு அருள் கடாக்ஷம் பொழிவால் என்று கூறினார். மேலும் ஈசன் தேவர்கள் அனைவரையும் கிளி வடிவம் எடுத்து அருகிலிருக்கும் சம்பக மரத்தில் தியான சாதனத்தை தொடங்கும்படி  கூறி மறைந்தார். 







நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits