Dr.Henry Meyer
CHEIRO சொன்னபடி Dr. Meyer இன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியதா?. அதை தெரிந்து கொள்வதற்கு முன் யார் இந்த Dr Henry Meyer. என்ன குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார் என்று பார்ப்போம். Dr. Meyer என்பவர் ஒரு மருத்துவர். அவர் தன்னிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நோயாளிகளில் வசதி படைத்த நபருக்கு உயிர் காப்பீடு (Life Insurance) எடுத்து வைத்து கொள்வார். அன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு காப்பீடு உறவினர்கள் மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று இல்லை, யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதனால் மருத்துவரான Meyer தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு காப்பீடு எடுத்து அவர்களை தான் கற்ற மருத்துவத்தின் மூலமே கொலை செய்துவிட்டு காப்பீடு தொகையை பெற்றுவிடுவார். இப்படிப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை விதிப்பது என்பது ஞாயம் தானே. இதை தான் நிருபரும் எண்ணினார். அனால் நடந்தவை என்னவென்றால். அந்த பரபரப்பான தீர்ப்பு நாளும் வந்தது. அதில் Dr. Meyerக்கு தொழில்நுட்ப காரணத்தினால் (On Techincal Grounds), மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். CHEIROவின் கை ரேகை கணிப்பும் பலித்தது. CHEIRO, Dr.Henry Meyer என்பவர் ஒரு கொலை குற்றவாளி என்று அவருடைய கை ரேகை பதிவிலிருந்து எவ்வாறு கண்டு பிடித்தார். CHEIRO Dr.Henry Meyerஇன் கை ரேகை பற்றி இவ்வாறு கூறினார் "Line of Head or Line of Mentality" கை ரேகை அவருடைய உள்ளங்கையில் வித்யாசமாக ஓடியது. அதாவது அந்த கை ரேகை அவருடைய உள்ளங்கையில் நடுவில் ஓடியது மட்டுமல்லாமல் அது அவருடைய நாலாவது விரலை (மோதிர விரல்) நோக்கி சென்றது. பொதுவாக "Line of Head or Line of Mentality" ரேகை மூன்று விதமாக இருக்கும், "Line of Head or Line of Mentality", "Line of Life" க்கு மேல்புறமாகவோ, உள்புறமாகவோ அல்லது இணைந்தோ இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு அசாதாரணமான விதத்தில் "Line of Head or Line of Mentality" Dr. Henry Meyer உடைய உள்ளங்கையில் இருந்தது என்று கூறினார். Dr. Henry Meyer உடைய கை ரேகை பதிவை கீழே கொடுத்தெள்ளேன். மேலும் CHEIRO அவர்கள் Dr. Henry Meyer மரண தண்டனையிலிருந்து எவ்வாறு தப்பிப்பார் என்று எதை பார்த்து உறுதிபண்ணினார் என்று அவர் இவ்வாறு கூறினார், "Line of Life" ரேகையில் தான் எந்த வித தடங்களையும் காணவில்லை என்று கூறினார்.
CHEIRO வின் சுவாரஸ்யங்கள் தொடரும்.