ஞாயிறு, 24 ஜனவரி, 2016

SHIP BUILDING SKILLS OF INDIANS


Ship Building Skills
      
The English word "Navigation" had been derived from the Sanskrit word "Navagati" meaning sea voyage. India has 5000 years of navigational history. Our navigational skills date back to the times of Indus valley civilization.
There is evidence to substantiate that India for the past 30 centuries was as central commercial hub. It had trade links not only with Greeks, Romans, Egyptians, Portuguese, Dutch, French and British but also with Asian countries like China, Japan, Indonesia, Burma, Java and Singapore through navigation.
  
Ships, which were built in India, were of two categories namely Soumya (simple) and Vishesha (Complex). They are built in different shapes. Most of the ships are multistoried and compartmentalized.
The persons involved in building the Ships were highly skilled artisans. For this reason, Indian ships were in great demand. Further, the longetivity of ships built in India was for half a century, in comparison with accidentally built ships, which had only ten to twelve years of longevity and were subjected to frequent repairs.
It was mentioned in a book called "le-hindus" published in 1811 AD written by Francuois Balazar Solvyans, a French navigator, that Englanders had learnt ship building skills and allied techniques from Indians.
Here is a recent reference to India's superior ship building skills. The Wall Street journal dt. 28.05.2003 had published a news item regarding America's war on Iraq. It says "A ship built based on the technology mentioned in old Indian literature, proved extremely in the war. This ship travels faster than many other ships. It transported more number of tanks than other ships and had capacity to convey nearly 500 Soldiers. Further it used to cover 2500 kms in 48 hours."
Even today, it is believed that Japan is the first Asian country, which had defeated European ships on a sea battle in the year 1905. But in the year 1742, king Marthanda Varma of Travancore defeated the Dutch Naval Cavalry consequently the Dutch Navy and served him loyally for more than two and half decades.
Ancient Indian navigation made it possible to establish Indian settlements in Indonesia, Sumitra, Java, Malaysia and South America etc.
The Indian skill of building ships was viewed with awe and wonder and of course with envy & fear as well. British Government, that rules India had brought a legislation in the year 1814 AD, which had destabilized the Indian shipbuilding Industry. It had banned the entry of Indian made ships into European ports. By the year 1863, Indian ship building artisans were jobless and were completely rooted out.
Sir William Deigo sarcastically commented that with the law in force, British queen had eliminated the Indian naval queen.

Hijacked Indian Aeronautics- Eternally Talented India



                                   நமது முன்னோர்களின் விமான அராய்ச்சி 



1895-ஆம் ஆண்டு- மும்பை சௌபாதி கடற்கரை மக்கள் பலர் ஆவலுடன் பார்த்து கொண்டிருக்க, ஓர் அதிசயம் அங்கே அரங்கேறியது.

ஆம். நவீன யுகத்தின் முதல் விமானம் காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் 1500 அடி உயரத்தில் பறந்தது. பின்னர் பாதுகாப்பாக தரையை தொட்டது. இந்த விமானத்தை அதன் வெள்ளோட்டத்தை கண்டுகளித்த பலருள் முக்கியமான இருவர் பரோடா மன்னர் ஸ்ரீசாயாஜிராவ் கேய்க்வாடு மற்றும் நீதியரசர் மகாதேவ் கோவிந்த ரானடே.

இந்த வானவூர்தியை வடிவமைத்து இயக்கியவர் சிவகுமார் பாபுஜி தளபதே (Shivkar Bapuji Talpade) என்பவர். இவர் ஒரு வேத ஆராய்ச்சியாளர். ஒரு விஞ்ஞானி. கலை கல்லூரியின் ஆசிரியர். 

வேதங்களில் கூறப்பட்டுள்ள வானவூர்தி அமைப்பின் இலக்கணங்களை ஆழ்ந்து  கற்று அதன்படி அவர் வடிவமைத்தது தான் இந்த நவீன உலகத்தின் முதல் ஆகாய விமானம்!

இச்செய்தி புனேயில் இருந்து வெளிவரும் பாலகங்காதர திலகரின் பத்திரிகையான கேசரி எனும் நாளிதழில் வெளிவந்தது.

ஆக அண்மைய கால வரலாற்றின் வானவியலுக்கு பாரதமே முன்னோடி. தளபதேயின் இந்த விமானத்தின் பெயர்  மாருதி சக்தி.

இது பரத்வாஜ மகரிஷியின் 'யந்திர சர்வஸ்வம்' என்ற நூலில் 'வைமானிக சாஸ்திரா' என்ற அத்தியாயத்தின் தொழில்நுட்ப கொள்கைகளை ஆழ்ந்து கற்ற தளபதேயின் விஞ்ஞான அறிவால் வடிவமைக்கப்பட்டது. இது ஏன் தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரிசையில் இடம் பெறவில்லை? விடை எளிது.

பிரிட்டிஷ் அரசு பரோடா மன்னரை மிரட்டி இந்த பெரும் மரமாக வளரவிருந்த இந்திய ஆராய்ச்சியை முளையிலேயே கிள்ளியது. அதோடு இந்த விமானத்தின் பாகங்களையும் செய்முறை குறிப்புகளையும் கைப்பற்றியது என டெக்கான் ஹெரால்ட் பத்திரிக்கை, செய்தி வெளியிட்டுள்ளது. (டிசம்பர் 2003)

இதற்கு 8 ஆண்டுகளுக்கு  பிறகே 1903, டிசம்பர் 7-ஆம் நாள் ரைட் சகோதரர்களின் விமானம் ஆகாயத்தில் பறந்தது.

பண்டைய பாரதத்தில் ஆகாய விமானம் பற்றிய ஆராய்ச்சி மிக பழங்காலதிலேயே இருந்தது என்பதை உணர்த்தும் தகவல்களில் சில:

திரிசக்கர ரதம் என்னும் முன்று சக்கரங்கள் கொண்ட, காற்றில் செல்ல கூடிய வாகனம். மற்றும் ஒரு வகை வாயுவின் சக்தியால் இயங்க கூடிய ஆகாய ஊர்தியை பற்றியும் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. எரிபொருள் மூலம் செலுத்தப்படகூடிய ரதங்கள் பற்றிய குறிப்பும் உள்ளது.

புராணங்களும் விமானங்களை பற்றிய பல செய்திகளை தருகின்றன. ராமாயணத்தில் வால்மீகி முனிவர் விளக்கும் புஷ்பக விமானம் காற்றில் நகரும் ஒரு நகரமாக விளங்கியது. ராவனணன் குபேரனிடமிருந்து இதை கைப்பற்றியதாக கூறபடுகிறது.

பாகவதத்தில், சிசுபாலனின் நண்பன் சால்வன், கிருஷ்ணன் மீது ஒரு வான்வெளி தாக்குதல் நடத்துகிறான். அவன் பயன்படுத்திய விண்வெளிகலம் 'ஸௌபா' என்ற பெயர் கொண்டு இரும்பினால் செய்யப்பட்டு உறுதியாக விளங்கியது. அது  மறைந்தும் மீண்டும் தோன்றியும் மயாஜாலமாக தாக்கும் சக்தி உடையது; தன்னிடமிருந்து மேலும் பல விமானங்களை வெளிபடுத்தும் சக்தி கொண்டது. உண்மையில் அது விமானம் அல்ல; ஓர் ஆகாய நகரம்!

கபில முனியின் பெற்றோர்கள் கபர்தா முனிவரும் அவரது மனைவியும் விமானத்தில் நக்ஷத்திரங்களுக்கு இடையே பயணித்ததாக ஒரு குறிப்பும் பாகவதத்தில் வருகிறது.

கௌடில்யர் நிர்வாகக் கொள்கைகளை பற்றி கூறும் தமது அர்த்த சாஸ்திரத்தில் விமான ஓட்டிகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் அரசு அளிக்க வேண்டியதின் முக்கியத்துவதை குறிப்பிடுகிறார். 

இந்திய வானவியல் பற்றிய பல செய்திகள் ஹரி வம்சம், மார்கண்டேய புராணம், விஷ்ணு புராணம், உத்தர ராமசரிதம், ஹர்ஷசரிதம், சீவக சிந்தாமணி (தமிழ்) போன்றவற்றில் கிடைகின்றன.

அண்மையில் சீன அரசு, திபெத் பகுதிகளில் கிடைத்த சமஸ்க்ரித கையெழுத்து பிரதிகளை, சண்டிகர் பல்கலைகழக பேராசிரியர் ருத்ரெய்னாவிடம் கொடுத்து அவற்றில் எழுதி இருப்பதை கண்டறிந்து சொல்லும்படி கேட்டுகொண்டது.

ருத்ரெய்னா இந்த கையெழுத்து பிரதிகள் நக்ஷத்திரங்களுக்கு ஊடேயான பயணம் மற்றும் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலான வான்வெளி பயணங்கள் பற்றிய பல செய்திகளை உள்ளடக்கியுள்ளன என்று கூறுகிறார். மேலும் அவர் 'இத்தகைய அற்புத சாஸ்திரங்கள் எனப்படும் எந்திரங்களின் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் மனிதர்களை வேற்று கிரகங்களுக்கு அனுப்பி இருக்ககூடும் என்கிறார்'.
 
 (Only a few years ago, the Chinese discovered some Sanskrit documents in Lhasa, Tibet and sent them to the University of Chandrigarh to be translated. Dr. Ruth Reyna of the University said recently that the documents contain directions for building interstellar spaceships! Their method of propulsion, she said, was "anti- gravitational" and was based upon a system analogous to that of "laghima," the unknown power of the ego existing in man's physiological makeup, "a centrifugal force strong enough to counteract all gravitational pull."
 
According to Hindu Yogis, it is this "laghima" which enables a person to levitate. Dr. Reyna said that on board these machines, which were called "Astras" by the text, the ancient Indians could have sent a detachment of men onto any planet, according to the document, which is thought to be thousands of years old).

வானவியலில் உன்னத நிலையை வேத காலத்திலேயே இந்தியா அடைந்திருந்தது என்பதை இவை உறுதி செய்கின்றன.


Source: Eternally Talented India 108 facts


சனி, 23 ஜனவரி, 2016

The Land of Tamil


தமிழனின் சாதனை பட்டியல்கள்





தமிழன் என்ன கண்டுபிடித்தான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

பதாகைக்கு (பதாகை என்பது கொடியைக் குறிக்கும் சொல்) வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில்  செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க  முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற  அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும்
ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள்

சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி,

ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே  போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான   பார்வைக்கும் பதிந்திருக்கிறேன்

நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியட்டும்


வெள்ளி, 22 ஜனவரி, 2016

Thiruvannamalai girivalam benefits in tamil



 திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்புகள்/ மகிமைகள்

சிவாய நம

திருவண்ணாமலை இடைக்காடர் சித்தர் வாழ்கின்ற தலம். ரமண மகரிஷி, வேதாந்த சேசாத்திரி, விசிறி சாமியார் இப்படி எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள் அருள்பெற்ற தலம். அருணகிரிநாதர் அருள்பெற்ற தலம். இப்படி பல அற்புதமான சக்திகளைக் கொண்ட திருவண்ணாமலைக்கு பௌர்ணமி திதியில் சென்று வந்தால் மகத்தான பலனை அடையலாம்.

கிரிவலம் வருவதால் என்னன்ன பயன்கள் உண்டாகிறது என்பதை அருனச்சலபுராணம் கூறுவதை பார்ப்போம்.

சோணகிரி வலம்புரிதல் பிரவிஎனும் 
             பெருங்கடற்குத் தோணி ஆகும் 

ஏழ்நகரக்  குழிபுகுதாது அறியமுத்தி 
            வழிக்குஏற ஏணி ஆகும்

கான்அறிய தவத்தினுக்கும் அறத்தினுக்கும் 
            அரும்பொருட்கும் காணி ஆகும் 

வாள்நுதல்மின் இடத்து இருக்கும் கண்ணுதலை 
             மனம் உருக்கும் மகிழ்ச்சி ஆகும் 

திருஅருணாச்சலத்தை வலம் செய்வது பிறப்பு என்னும் பெரிய கடலை தாண்டுவதற்கு ஒரு தோணியாகும். நரகம் செல்லாமல் தடுத்து முக்தி பெறலாம். தவம் தர்மம் செய்த பலனைப் பெறலாம். பெரிய செல்வத்தை பெறுவதற்கு இந்த கிரிவலம் ஒரு காணியாகக் இருக்கும். பராசக்தியை இடதுபக்கம் வைத்திருக்கும் பரமசிவனை மனமுருகி வேண்டினால் எல்லா அருளும் ஞானமும் கிடைக்கும்.


இனி ஒவ்வொரு நாளும், அதாவது ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற நாட்களில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை அருநாச்சலபுராணம் கூறுவதை பார்ப்போம்.


வரம்தரும் அருக்க வரம் 
                                               மலைவலம் புரிந்தோர், வெய்யோன் 

தெரிந்தமண் டலத்தை கீறிச் 
                       சிவகதி பதியாய்ச் சேர்வார்;

திரம்தரும் சோம வாரம் 
                           திருமலை வலமாய் வந்தோர்,

புரந்தரன் எனஏழ் பாரும் 
                              புரந்தஅரண் தன்மை பூண்பார்.

ஞாயிறு கிரிவலம் வருவது நினைத்த காரியங்கள் நடக்கும். பல வரங்கள் கிடைக்கும். சூரிய மண்டலத்தை பிளந்து சிவபதத்தை அடையலாம். சிவஞானத்தைப்  பெறலாம். திங்கள்கிழமையில் வலம் வந்தவர்கள் ஏழு உலகத்தையும் ஆளுகின்ற சக்தியை பெறுவார்கள். இந்திரனை போல் சகல பாக்கியங்களுடன் வாழும் அற்புதமான வாழ்க்கை உண்டாகும்.

மங்கல தினத்தில் சூழ்வோர் 
          கடனுடன், வறுமை நீங்கிச் 

சங்கிலித் தொடராம் ஏழு 
                           பிறப்பையும் தவிர்ப்பார்; புந்திக்கு 

எங்கள்நா யகரைச் சூழ்வோர்,
                 இருங்கலை மறைகள் நாலாறு 

அங்கமும் தெளிந்து முக்திக்கு 
  அருகராய் அமரர் ஆவார். 

செவ்வாய்கிழமை கிரிவலம் வந்தால் கடன்கள் நீங்கும். வறுமை இல்லாமல் போகும். எதிர்ப்புகள் விலகும். சங்கிலித்  தொடர்போல் வருகின்ற ஏழுபிறப்பையும் நீக்கலாம். முக்தி அடையலாம். வெற்றி உண்டாகும். புதன் கிழமை கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்கினால் நான்கு வேதங்களும் நாவில் குடி கொள்ளும். ஆறு சாஸ்திரங்களும், அறுபத்தி நான்கு கலைகளும் கைகூடப்  பெறுவார்கள். தேவர்களை போல் வாழ்வார்கள்.


மா  வியாழத்தில் செய்ய 
                                 மணிவரை வலமாய் சூழ்வோர் 

மூவரும் புகழத் தேவர் 
                         முனிவர்தம் குரவர் ஆவார்,

தாவிலா வெள்ளி வாரம் 
                                  தனில்வலம் புரிந்தோர், கஞ்சப் 

பூவையைப் புணரும் பூவைப் 
                                                           புணரும்மால் புரத்தில் சேர்வார் 

வியாழகிழமைகளில் சிவப்பு மலையாகிய அருணாச்சலத்தை வலம் வந்தால், மும்மூர்த்திகளின் அருள் கிடைக்கும். மும்மூர்த்திகளும் புகழும்படியான வாழ்க்கை கிடைக்கும். முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஆசிரியராக திகழும் நிலை உண்டாகும். வெள்ளிகிழமை கிரிவலம் வந்து ஈசனை வேண்டினால் வற்றாத செல்வம் உண்டாகும். பொன்  சேரும். தாமரை மலரின் மேல் இருக்கும் லக்ஷ்மியின் அருள் கிடைக்கும். விஷ்ணுவின் பூரண அனுக்ரகத்தை பெறலாம்.

உதயமே சனிநாள் சூழ்வோர்க்கு,
               ஒன்பது கிரகம் நன்றாய்ப் 

பதினோராம் இடத்தில் தூய 
                       பலன்களைப் பலியா நிற்கும்;

மதிஅணி சிவன் இராவும்,
                                 வருடம் வந்து உதிக்கும் நாளும்,

அதிகமாம் அதிகம் ஆகும்,
                     ஐப்பசி முதலாம் மூன்றும்,

சனிக்கிழமை அதிகாலை திருவண்ணாமலையை வலம்வந்து சிவபெருமானை வணங்கினால் நவகிரகங்களின் தோஷம் விலகும். ஒன்பது கிரகங்களும் ஜாதகத்தில் லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்தில இருந்தால் என்ன நற்பலன்களை அடைய முடியுமோ, அத்தனை அற்புதமான பலன்களை அடையலாம். பிறைசூடிய அந்த எம்பெருமானை சிவராத்திரியில் வலம் வருவதும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி இந்த மூன்று மாதமும் தொடர்ந்து கிரிவலம் செய்வோர்க்கு நவகிரகங்களும் சுபகிரகங்களாக மாறி  நன்மைகளை வாரி வழங்கும். ஒவ்வொருவருக்கும் லக்னத்திர்க்கு பதினோராம் இடமான லாப ஸ்தானம் சிறப்படையும். 

சிவாய நம

  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...