ஒரு வணிகன் தன் பொருளை சந்தை படுத்த வேண்டும் என்றால், முதலில் அந்த பொருளை மக்கள் பயன்படுத்த வேண்டும். மக்கள் எடுத்தவுடன் அந்த பொருளை செலவு செய்து வாங்க மாட்டார்கள். ஆனால் அந்த பொருளை மக்கள் பயன்படுத்தி அதுவே அவர்களுக்கு பழக்கமாக மாறிவிட்டால் வணிகன் அவனுடைய வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். அதனால் வணிகன் அந்த பொருளை முதலில் மக்களுக்கு இலவசமாக தந்து அந்த பொருளுக்கு பழக்கம் அடைந்து விடுவார்கள். பிறகு அந்த பொருள் அவர்கள் வாழ்கையுடய இன்றியமையாததாக மாறிவிடும். இதையே ஆங்கிலத்தில் Habituated என்று கூறுவர். பெரும்பாலான e-commerce வர்த்தகத்தில் இந்த யுக்தியையே பயன்படுத்துகிறார்கள். முதன் முதலில் இந்த முறையை நம் தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் நடைமுறை படுத்தினார்.
அன்றைய காலகட்டத்தில் மாட்டு மற்றும் குதிரை வண்டியில் மக்கள் பயணித்தாகள். ஒரு பெரிய தொழில் நிறுவனத்தை நடத்தும் முதலாளி, தன் தொழிலை விரிவு படுத்த எண்ணி, கார்களை இறக்குமதி செய்தார். இந்த காரை எப்படி சந்தை படுத்துவது, யாரிடம் கொண்டு விற்பது என்று தெரியவில்லை. அதற்கு அவர் ஒரு உத்தியை கையாண்டார். தங்கள் ஊரில் இருக்கும் பெரிய செல்வந்தர்கள் யாரென ஆராய்ந்தார். அப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுத்தார். தன் ஊரில் உள்ள பெரிய ஜமீந்தார் வீட்டுக்கு தான் இறக்குமதி செய்த காரை எடுத்து கொண்டு அவர் வீட்டுக்கு சென்றார். அவரிடம் நன்றாக பேசிவிட்டு அவரிடம் ஒரு உதவி கேட்டார். அது என்னவென்றால், தனக்கு அந்த ஜமீன்தாருடைய குதிரை வண்டியை ஒரு வாரத்துக்கு இறவலாக கேட்டார். அது வரைக்கும் ஜமீந்தார் தன்னுடைய காரையும், கார் ஓட்டுனரையும் பயன் படுத்தி கொள்ளலாம் என்று கூறினார். ஜமீந்தார் ஒரு வாரத்துக்கு அந்த காரில் தன் பயணத்தை தொடர்ந்தார். காரில் பயணம் செய்வது ஜமீண்தாருக்கு ஒரு புது விதமான அனுபவத்தை தந்தது. குதிரை வண்டியில் செல்வதை விட வேகமாகவும் விரைவாகவும் செல்ல முடிந்தது. மேலும் பயண அழுப்பே தெரியவில்லை. ஒரு வாரம் கழித்து தன்னுடைய காரை ஜமீண்தாரிடம் திருப்பி வாங்க அந்த தொழில் அதிபர் வந்தார். ஜமீண்தாருக்கோ காரை திருப்பி தர மனமில்லை. காரில் சென்ற அனுபவம் மேலும் தொடர ஆசை வந்தது. தொழில் அதிபரிடம் அந்த காரின் விலை என்னவென்றும் அதனை தானே வாங்கி கொள்வதாகவும் கூறினார். அந்த தொழில் அதிபருக்கு தான் எண்ணிய எண்ணம் நிறைவேறியது என்று சந்தோசம். தன்னுடைய முதல் காரை சாமர்ததியமாக வியாபாரம் செய்தார்.
யார் அந்த தொழில் அதிபர். அவர் வேறு யாருமில்லை TVS SUNDARAM IYENGAR அவர்கள்.