காஞ்சி காமாட்சியின் வரலாறு
ஏன் காஞ்சியில் இருக்கும் அணைத்து சிவாலயங்களிலும் அன்னைக்கு தனி சந்நிதி இல்லை? இந்த காஞ்சிபுர எல்லைக்கு வெளியில் இருக்கும் ஒவ்வொரு சிவா ஆலயத்திலும் அம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கும். ஒரு காலத்தில் கைலாசம் முதலிய எல்லா உத்தம கோயில்களில் இருந்த அம்பிகை, தன்னுடைய ஷக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி காயத்ரி மண்டபம் அடியில் உள்ள குகையில் இருக்கும் பீடத்தில் ஆகாய வடிவமாக அமர்ந்தாள். பிறகு ப்ரம்மா தவம் செய்து பிரார்த்திக்க, அந்த பிரார்த்தனைக்கு இணங்கி அன்னை தனது சக்தியை எல்லா உத்தம க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி அங்கு சாந்நித்யமாக இருக்குமாறு அனுகிரகம் செய்தால். ஆனால் எல்லா சக்திகளையும் தன்னுள் அடக்கிய அடையாளத்துக்கு சான்றாக இந்த காஞ்சிபுர எல்லைக்குள் இருக்கும் சிவாலயங்களில் மாத்திரம் தனது சக்தியை அனுப்பாமல் காமக்கோட்டத்தில் உள்ள பிலகாசத்திலே தனது சக்தியை நிறுத்தி, தன்னை வேண்டி வரும் பக்தர்கள் அனைவருக்கும் தன் அருள் கடாக்ஷத்தை வாரி வழங்குகிறாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக