வியாழன், 11 ஜூன், 2026

காஞ்சி காமாட்சியின் வரலாறு - லலிதா திருபுரசுந்தரி தேவர்களுக்கு இட்ட கட்டளை

 காஞ்சி காமாட்சியின் வரலாறு 

லலிதா திருபுரசுந்தரி தேவர்களுக்கு இட்ட கட்டளை 




காஞ்சி காமாட்சியின் கட்டளைக்கிணங்க, தேவர்கள் பந்தகாசுரனை, தேவி தன் சுண்டு விரலால் கீறி காட்டிய இடத்தில புதைத்தனர். புதைத்த இடத்தில ஜெயஸ்தம்பம் ஒன்றையும் காமாக்ஷி அம்மனின் கட்டளையை ஏற்று நட்டனர் . மேலும் தேவர்கள்  24 அட்சரங்களை கொண்ட காயத்ரி மந்திரத்தை குறிக்கும் வண்ணமாக 24 தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்றையும் கட்டினார்கள். பிறகு தாங்கள் தரிசித்து பாக்கியம் பெற்ற அன்னையின் திருவுருவத்தை சிலையாக செய்து, பிரணவ மந்திரத்தை குறிக்கும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அன்னையின் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். பின்னர் தேவர்கள், அன்னையின் ஆணைக்கு இணங்க கதவை மூடிவிட்டு வெளியே வந்து அமர்ந்து, அன்று இரவு முழுவதும் அன்னைக்கான மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்து கொண்டிருந்தனர். மறுநாள் விடியற்காலைக்கு சற்று முன்பு, தேவர்கள் மிகுந்த பக்தியுடன் கதவை திறந்த பொது, அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் அன்னை ராஜா ராஜேஸ்வரியாக காட்சி கொடுத்தால். காஞ்சியில் உள்ள காமகோட்டத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில், ஸ்ரீ காமாக்ஷி தேவியின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, தேவர்களின் தலைமைச் சிற்பியான விஸ்வகர்மா ஒரு பல்லக்கையும், பிரம்மதேவர் முத்துக்களால் ஆன ஒரு சிகை அலங்கார ஆபரணத்தையும், மகாவிஷ்ணு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு கிரீடத்தையும், சிவபெருமான் ஸ்ரீ சக்கரம் என்றழைக்கப்படும் ஒரு ஆரத்தையும் வழங்கினர். அவர்கள் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் திருவுருவச் சிலைக்கு அனைத்து ஆபரணங்களையும் அணிவித்து, அவளை வழிபட்டு, காஞ்சியில் உள்ள இந்தத் தலத்தைப் புனிதப்படுத்தி, இனிவரும் எல்லா காலங்களிலும் பக்தர்களுக்குத் தனது அருளைப் பொழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits