CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 3
பிரிட்டிஷ் அரச குடும்பம் CHEIRO வின் ஜோதிட நிபுணத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதற்கு காரணம் CHEIRO வின், இங்கிலாந்து மாமன்னர் EDWARD VII பற்றிய ஜோதிட கணிப்பு தான். CHEIRO 1891ஆம் ஆண்டு முதல் முறையாக ராஜா EDWARD VII சந்தித்தார். அது ஒரு சுவாரஸ்யமான கதை. CHEIROவின் பெண் வாடிக்கையாளரான ஒருவர் CHEIROவை தன் இல்லத்துக்கு வருமாறு அழைத்தார். CHEIROவும் அவருடைய இல்லத்துக்கு சென்றார். அங்கு அந்த பெண் வாடிக்கையாளர் CHEIROவிடம் நீங்கள் எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும். நான் இங்கு திரை போட்டிருக்கிறேன், அந்த திரைக்கு பின்னால் அமர்ந்து, திரைக்கு முன்னாள் இருப்பவர் கைகளை பார்த்து ஜோதிடம் கூற வேண்டும். அவர் இதற்காகவே இங்கு பிரத்யேகமாக வந்து கொண்டிருக்கிறார் என்றார். CHEIROவிர்க்கு வருபவர் யாரென்று தெரியாது. சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூரிவிட்டு சென்றால். CHEIRO திரைக்கு பின்னால் அமர்ந்து வெளிச்சத்தை சரிபார்த்து கொண்டு, வருபவரை எதிர் நோக்கி கொண்டிருந்தார். வந்தவர் தன் கைகளை திரைக்கு முன்னாள் இருக்கும் CHEIRO விடம் காண்பித்தார். CHEIRO அவருடைய கைகளை பார்த்து முக்கியமான சில நாட்களையும் தேதிகளையும் குறிப்பிட்டு அந்த தேதிகளும் மற்றும் நாட்களும் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று கூறினார். மேலும் அவர்களுடைய வாழ்கையில் எண்கள் 6 மற்றும் 9 தொடர்புடைய கிழமையோ, நாட்களோ, மாதமோ முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று கூறினார். உதாரணத்திற்கு மார்ச் 21- ஏப்ரல் 21, ஏப்ரல் 21- மே 27, அக்டோபர் 21-நவம்பர் 27 போன்ற மேலே குறிப்பிட்ட தேதிகளில் முக்கியமான நிகழ்வுகள் உங்களை தனிப்பட்ட முறையில் பாதிக்கும் வண்ணம் இருந்திருக்கும் என்று கூறினார். அதை கேட்ட உடன் EDWARD VII அவர்கள் வியந்து, அது முற்றிலும் உண்மையகவே இருப்பதை உணர்ந்து சற்று முன்னே வந்தது தான் தாமதம் அந்த திரையில் குத்த பட்டிருந்த ஊசி கழன்று திரை கீழ விழுந்தது. EDWARD VII அவர்களும் CHEIRO அவர்களும் நேர் எதிரே சந்தித்து கொண்டனர். CHEIRO அவர்களுக்கு சற்று பயமும் பதற்றமும் தோற்றி கொண்டது. ஆனால் EDWARD VII அவர்கள் CHEIRO விடம் நீங்கள் பயப்பட தேவையில்லை, நீங்கள் உங்கள் திரமையை அற்புதமாக வெளிப்படுத்திநநீர்கள், மேலும் முதல் முறையாக என் வாழ் நாளில் இது போன்ற விஷயங்களில் நான் முழு திருப்தி அடைந்தேன் என்று கூறினார். மேலும் EDWARD VII அவர்கள் CHEIRO விடம் நீங்கள் நான் யார் என்பதை மறந்து முன்பு போலவே நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை கூறலாம் என்றார். CHEIRO அவர்கள் சற்றே நிதானித்து மேலும் கூறலானார். அதன் பிறகு CHEIRO அவர்கள் ஒரு காகிதத்தை எடுத்து அதில் சிலவற்றை குறிப்பிட்டு எந்தெந்த வருடத்தில் மற்றும் தேதியில் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான சில நிகழ்வுகள் நடக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் EDWARD VII அவர்கள் இந்த 6ம் என்னும் 9ம் என்னும் இணையும் பொழுது என் வாழ்க்கை கடைதெருமா என்று கேட்கவும் CHEIRO அவர்கள் "ஆம்" என்று பதில் அளித்தார். அதையே EDWARD VII அவர்கள் நகைச்சுவையாக CHEIRO வை பார்க்கும் பொழுது எல்லாம் இவ்வாறு கூறுவார் "பாருங்கள் இந்த மனிதர் என்னை 69 வயதுக்கு மேல் வாழ விடமாட்டேன் என்கிறார்". CHEIRO கூறியது போல் 1841ல் பிறந்த அரசர் EDWARD VII, 1910ஆம் ஆண்டு மே மாதம் தனது 69 வது வயதில்தான் காலமானார்.
இன்னொரு சமயம் அரச குடும்பத்தை சேர்ந்த நபர்களுடய கைகளை பார்பதற்கு CHEIRO வுக்கு அழைப்பு வந்தது. CHEIRO அவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்த ஒவ்வோருவர் கைகளையும் வரிசையாக பார்த்து கொண்டு வந்தார். அப்பொழுது இளவரசர் Edward VIII (Prince of Wales) இன் கைகளை பார்த்து கூறிய விஷயம் அரச குடும்பத்தை பதர வைத்தது. அது என்னவென்றால் இந்த இளவரசர் அரியணை ஏறினாலும் தன் காதலுக்காக மணிமுடியை துறப்பார். காதலா அல்லது ராஜ்ஜியமா என்று யோசித்தாள் இவர் காதலை தேர்ந்தெடுத்து ராஜ்ஜியத்தை துரப்பார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டனின் ஆழுமையின் கீழ் 26 நாடுகள் இருந்தது. CHEIRO அவர்கள் சொன்னது போல் EDWARD VIII 10.12.1936 அன்று தன்னுடைய காதலி Wallis Simpson என்பவருக்காக தன் மனிமுடியை துறந்தார்.
Edward VIII and Wallis Simpson on their Mediterranean holiday, 1936.
Edward VIII அவர்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டிகுள் செல்லவும்.
https://en.m.wikipedia.org/wiki/Edward_VIII