Tiruvannamalai girivalam benefits, Guruvayurappan temple history, Augmented Reality, Lamborghini cars, Cheiro Palmistry
புதன், 5 ஜனவரி, 2022
பிரபலமான நாட்டிய கலைஞரின் ஜாதகம் எவ்வாறு இருக்கும்
செவ்வாய், 4 ஜனவரி, 2022
குங்கிலியக் கலய நாயனார்
குங்கிலியக் கலய நாயனார்
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவருக்கு 'குங்கிலியக் கலய நாயனார்' என்ற பெயர் எப்படி வந்தது என்று பாப்போம். இவருடைய இயற்பெயர் 'கலய'. இவர் திருக்கடையூரில் ஒரு அந்தண குடுமபத்தில் பிறந்தார். இவருக்கு திருக்கடையூரில் இருக்கும் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் உள்ள ஈசன் பால் உள்ள அதீத பக்தியினால் தினமும் கோயிலில் குங்கிலிய புகை (அதாவது சாம்பிராணி) போடுவது வழக்கம். நல்ல செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும் இந்த குங்கிலிய புகை போடும் தொண்டை நெடுங்காலம் செய்து வந்தார். அதனாலேயே இவருக்கு 'குங்கிலியக் கலய நாயனார்' என்ற பெயர் வந்தது. இறைவனார் இவரை சோதிக்க எண்ணினார். வறுமை அவரையும் அவர் குடும்பத்தையும் சூழ்ந்தது. வீட்டில் இருக்கும் விலையுர்ந்த பொருட்களை எல்லாம் விற்க முற்பட்டார். வறுமையிலும் தன்னுடைய குங்கிலிய புகை போடும் தொண்டை தொடர்ந்தார். ஒரு நாள் வறுமை அவர்களை மிகவும் வாட்டியது. விற்பதற்கு வீட்டில் ஒன்றுமில்லை. அவருடைய பெண்டிரும் மக்களும் பசியால் வாடினர். குங்கிலியக் கலய நாயனாரின் மனைவியிடம் அவர் கட்டின தாலியை தவிர வேறு பொருள் எதுவும் இல்லை. குழந்தைகளின் பசியை போக்குவதற்காக தன்னுடைய தாலியை குங்கிலியக் கலய நாயனாரிடம் கொடுத்து அரிசி வாங்கி வர அனுப்பினார்.
குங்கிலியக் கலய நாயனார் அரிசி வாங்குவதற்காக சந்தை சென்றார். இறைவன் இவரை சோதிக்க எண்ணினார். ஈசன் குங்கிலிய வியாபாரம் செய்யும் ஒரு வணிகனாக உருமாறி, குங்கிலியம் விற்று கொண்டு வந்தார். குங்கிலியக் கலய நாயனார் அரிசி வாங்குவதற்காக அரிசி கடையில் நின்று கொண்டு இருந்தார். நம் அருகில் எதோ குங்கிலிய வாசனை வருகிறதே என்று திரும்பி பார்த்தார். ஒரு வணிகன் கூடை நிறைய குங்கிலியம் விற்று கொண்டு வருவதை பார்த்தார். மனம் இறைவனுக்கு செய்யும் கைங்கரியம் பால் திரும்பியது. வறுமையும் மறந்து போனது. மனைவி எதற்காக இந்த தாலியை கொடுத்தார் என்பதும் மறந்து போனது. குங்கிலியம் விற்கும் வணிகனை நிறுத்தினார். அப்பா! இந்த ஒரு கூடை குங்கிலியத்திற்கு இந்த தாலி போதுமானதாக இருக்குமா? என்று கேட்டார். வந்திருப்பதோ ஈசன், ஆம் சரியாக இருக்கும் என்று தாலியை பெற்று கொண்டு கூடை குங்கிலியத்தையும் நாயனாரிடம் ஒப்படைத்தார்.
நாயனார் மிகுந்த சந்தோஷத்துடன் குங்கிலியத்தை வாங்கி கொண்டு அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலுக்கு சென்று கோயில் மடப்பள்ளியில் குங்கிலியத்தை சேர்த்தார். மனதிற்குள் மிகுந்த மகிழ்ச்சியும், சந்தோசமும். இன்னும் கொஞ்ச நாளைக்கு குங்கிலிய தொண்டுக்கு தடை இல்லை என்று மனம் தேற்றி கொண்டார். அப்படியே கோயிலில் கண் அசந்து தூங்கினார். அவர் மனைவி, கணவர் வருவார் என்று காத்திருந்து வாசலையே பார்த்திருந்தார். கணவர் வருவதாக தெரியவில்லை. பிள்ளைகளும் அவளும் பசி மயக்கத்திலேயே தூங்கி போனார்கள். உலகத்துக்கே படி அளக்கும் ஈசன் தன் தொண்டனையும், தொண்டன் குடும்பத்தையும் பசியால் வாடுவிடுவாரா என்ன?.
ஈசன் குங்கிலியக் கலய நாயனாரின் மனைவியின் கனவில் தோன்றினார். தாயே! எழுந்திரு உன் வீட்டில் சகல சம்பத்துகளும் இருக்கும்படி செய்தேன். குங்கிலியக் கலய நாயனாரின் மனைவி கண் விழித்து பார்த்தார். கனவா அல்லது நினைவா! வீடு முழுவதும் விலையுர்ந்த பொருட்களும், உணவு தானிய பொருட்களும் இருக்கின்றதே. எல்லாம் ஈசனின் கருணை என்று எண்ணி தன கணவருக்காக கரியமுது சமைக்க தயாரானாள். ஈசன் அதோடு விட வில்லை குங்கிலியக் கலய நாயனாரின் கனவிலும் சென்று, மகனே! எழுந்திரு, உன் மனைவி உனக்காக கரியமுது சமைத்து காத்து கொண்டிருக்கிறாள். சென்று வயிறார உன் என்று உரைத்தார். குங்கிலியக் கலய நாயனார் வீட்டை நோக்கி சென்றார். என்னே ஆச்சரியம் அவர் வீடு முழுவதும் செல்வம் நிறைந்து இருந்தது. மனைவிடம் கேட்டார், மனைவி தன்னுடைய கனவு பற்றி குங்கிலியக் கலய நாயனாரிடம் தெரிவித்தார். குங்கிலியக் கலய நாயனாரும் தன கனவில் வந்து ஈசன் தன்னை சாப்பிட வீட்டிற்கு செல்லுமாறு கூறியதையும் மணிவயிடம் சொன்னார். குங்கிலியக் கலய நாயனாரும் அவருடைய மனைவியும் ஈசனின் கருணையை நினைத்து மெய்யுருகி நின்றனர்.
குங்கிலியக் கலய நாயனார் பற்றிய மற்றுமொரு சம்பவம்:
திருப்பனந்தாள் என்னும் ஊரில் அருண ஜடேஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டு ஈசன் வீற்று இருந்தார். அவ்வூரை சோழ மன்னன் ஆண்டு வந்தான். அவ்வூரில் உள்ள அருண ஜடேசவ்ரர் கோயிலை புனரமைக்க எண்ணினான். ஆனால் சோழ மன்னனின் மனதிற்குள் ஒரு சிறிய வருத்தம் இருந்தது. அது என்னவென்றால் கோயிலில் உள்ள லிங்கம் முன் பக்கம் சாய்ந்தவாறு இருப்பது. லிங்கம் எப்படி சாய்ந்தவாரானது? தாடகை (இவர் ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) என்னும் பெண்மணி தனக்கு குழந்தை வரம் வேண்டி அருண ஜடேஸ்வரருக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டினால். ஒரு நாள் மாலையை சூடும் பொழுது தான் உடுத்தி இருந்த சேலை நழுவிற்று, தன சேலையை முழங்கையால் பிடித்து கொண்டால். மாலையையும் கையில் பிடித்து கொண்டால். ஆனால் அவளால் மாலையை உயர்த்தி ஈசனுக்கு சூட முடியவில்லை. ஈசனிடம் மனமுருகி வேண்டினாள், தன் மானத்தையும் காத்து, தன் மாலையையும் ஏற்றுக்கொள்ள வேண்டினாள். ஈசன் பக்தையின் திருவுள்ளத்திற்கேற்ப தன லிங்க மேனியை சாய்த்து மாலையை ஏற்று கொண்டார். அன்றிலிருந்து ஈசனின் லிங்க மேனி சாய்ந்தவாறு இருந்தது.
மன்னனுக்கோ ஈசனின் லிங்க மேனியை நிமிர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தன்னுடைய சேனைப்படை வைத்து ஈசனின் லிங்க மேனியை நிமிர்த்த முயற்சித்தார். ஆனால் அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. தன பட்டது யானையை கொண்டும் ஈசனின் லிங்க திருமேனியை நிமிர்த்த தயாரானார். அதுவும் பலனளிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாது ஈசனிடம் மனமுறுகினார். அருகிலிருந்த பெரியோர்கள் குங்கிலிய கலய நாயனார் பற்றியும் அவருடைய சிவ பக்தியை பற்றியும் கூறினார்கள். ஈசன் எவ்வாறு தன் பக்தைக்காக தன் லிங்க திருமேனியை சாய்த்தாரோ, அதே ஈசன் இன்னொரு பக்தனுக்காக தன்னுடைய லிங்க திருமேனியை நிமிர்த்து கொள்வார், கவலைப்படாதீர்கள் என்று கூறினர்.
குங்கிலியக் கலய நாயனாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குங்கிலிய களைய நாயனார் திருப்பனந்தாள் என்னும் ஊரில் இருக்கும் அருண ஜடேஸ்வரர் கோயிலை நோக்கி சென்றார். ஈசனின் லிங்க திருமேனியை சுற்றி கயிறை காட்டினார். மற்றொரு பக்கம் இருக்கும் கயிறை தன்னுடைய கழுத்தில் மாட்டி கொண்டார். ஈசனை தன் கழுத்தில் மாட்டியிருக்கும் கயிறால் இழுத்தார். ஈசனின் திருமேனி மெல்ல நிமிர்ந்தது. என்னும் வேகமாக இழுத்தார். ஈசனின் லிங்க திருமேனி முழுவதுமாக நிமிர்ந்தது. பட்டத்து யானைக்கு நிமிராத ஈசனின் லிங்க திருமேனி குங்கிலியக் கலய நாயனாரின் பக்திக்கு நிமிர்ந்தது.
திங்கள், 3 ஜனவரி, 2022
‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’ Translation by Sri Ramana Maharishi
ஸ்ரீசங்கர ஜெகத்குரு மேற்கு திக்கில் பயணம் செய்தபோது, ஸ்ரீவல்லி எனும் கிராமத்தில், பிரபாகர் எனும் அந்தணர், சங்கரரின் வரவை அறிந்து, தன் 13 வயது புத்திரனை அழைத்துக்கொண்டு போய், அவனை நமஸ்காரம் செய்ய வைத்து, தானும் நமஸ்கரித்து, சின்ன வயது முதல் பேச்சு வராதவனாக, எதிலும் நாட்டம் இல்லாதவனாக, விருப்பு - வெறுப்பு இல்லாதவனாக, எதிலும் பக்குவம் இல்லாதவனாக இருக்கிறவனுடைய நிலைமையைச் சொல்ல... ஸ்ரீசங்கரபகவத்பாதாள் அந்த பாலகனை அணைத்துக்கொண்டார். "குழந்தாய், நீ யார், யாருடைய மைந்தன் நீ, எங்கே சென்றுகொண்டு இருக்கிறாய், உன் பெயர் என்ன, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?" என்று மிகக் கூர்மையான பெரிய கேள்விகளைக் கேட்டார். அவரிடம் அந்த பாலகன், தன் நிலைமையைப் பற்றி வாய் திறந்து சொன்ன ஸ்லோகங்களே, ‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’. வடமொழியில் அமைக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், பகவான் ஸ்ரீரமணர். நான் மனிதன் அல்ல. தேவனோ, யட்சனோ, அந்தணனோ, அரசனோ, மனிதனோ அல்ல; நான் பிரம்மசாரியும் அல்ல; கிரகஸ்தனும் அல்ல; பால பிராயனும் அல்ல; கிழவனுமல்ல; ஒட்டுமொத்த சந்நியாசியும் அல்ல; யார் ஒருவனும் நான் அல்லேன்; நான் சத்தியபோத ஞான சொரூபமானவன். இதுவல்ல, இதுவல்ல என்று சொல்லி, தான் ஆன்மா என்பதை மிக அழகாக, அந்த குழந்தை ஸ்லோகங்களாகப் பேசினான். ‘மேலே இருக்கிற சந்திரன், காற்றில் அசையும் அலைகளால் ஆடுவதைக் கண்டால், சந்திரன் ஆடுவது போல இருக்கும். ஆனால், சந்திரனா ஆடுகிறான்? இல்லை; இது கண் கொண்ட மயக்கம். இதே மயக்கம்தான் புத்திக்கு இருக்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் அந்நியர் என்று நினைத்துக்கொள்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் வேறு மதத்தவர், வேறு இனத்தவர், வேறு குலத்தவர் என்று நினைத்திருக்கிறது. உயர்வு என்றும், தாழ்வு என்றும் பிரித்துக்கொள்கிறது. இது புத்தியினுடைய ஆட்டம். மாயையான பார்வை. ஆனால், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிற அந்த விஷயம் பேதமற்றது. அதுதான் உன்னிலும் சகல இடத்திலும் பரவியிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட ஆன்மா நான்.’ பையன் சொன்ன ஸ்லோகங்களைப் பார்த்து, தந்தை பிரமித்து, புதல்வனை வெளிக்கொண்டு வந்த குருவை நோக்கிக் கைகூப்பி நிற்க, "இவனை மகனாக நீங்கள் அடைந்தது பாக்கியம். இவனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை; இவன் என்னோடு இருக்கட்டும்" என்று அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார். பகவத்பாதாளுடைய சீடர்கள், "குழந்தை ஏன் இப்படி இருந்தது? ஏன் இப்படி ஆயிற்று?" என்று கேட்க, "இந்தக் குழந்தையின் தாய் கங்கையில் குளிக்கப் போனபோது, ஒரு சாதுவிடம், இந்தக் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளும்படி, ஒப்படைத்துவிட்டுப் போனாள். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே, அந்த குழந்தை கால் இடறி, கங்கையில் விழுந்து, மரணமடைந்துவிட்டது. குழந்தையை வாரி எடுத்த சாது, என்ன செய்வது, பெற்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கினார். பெற்றவள் அழக்கூடாது என்று தீர்மானித்து, தன் உடம்பைவிட்டு, இந்தக் குழந்தைக்குள் புகுந்துகொண்டார். அந்தச் சாதுவே, இந்தக் குழந்தை" என்று பகவத்பாதாள் சொன்னார்.
புதன், 29 டிசம்பர், 2021
ஒரு புது பொருளை சந்தை படுத்தும் உக்தி
சனி, 27 நவம்பர், 2021
CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 4
CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 4
CHEIRO தன்னுடைய secretary இடம் தான் கை ரேகை பார்க்கும் நபரின் விபரஙகளை தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவு இட்டுறுந்தார். அது எதற்காக வென்றால் தன்னிடம் கை ரேகை பார்க்கும் நபர்கள் பெரும்பாலானோர் பிரபல்யம் ஆனவர்களாக இருப்பதாலும், அவர்களை பற்றி முன்னமே தெரிந்து இருப்பதனால் தான் கை ரேகையை பார்த்து அலசி கூறினாலும், அவரை பற்றி ஏற்கனவே தெரிந்ததால் கூறுகிறோம் என்று நினைக்க வாய்ப்பு உண்டு என்பதற்காக. ஒருமுறை அமெரிக்காவின் எழுத்தாளரும் நகைச்சுவையாளருமான Mark Twain என்பவர் CHEIRO, விடம் தன்னுடைய கையை காண்பித்து எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வந்திருந்தார். CHEIRO விற்கு வந்திருப்பவர் பிரபல எழுத்தாளர Mark Twain என்பது தெரியாது. Mark Twain அவர்கள் அப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். Mark Twain அவர்கள் CHEIRO வை சந்திப்பதற்காக வந்து விட்டாரே தவிர மனதுக்குள் தான் நேரத்தையும் பணத்தையும் வீன் செலவு செய்கிறோமோ என்ற நினைப்பு மேலோங்கி இருந்தது. நாம் அனைவரும் நினைப்போம் அல்லவா, "வந்தது வந்து விட்டோம் அவர் என்னதான் சொல்ல போகிறார் என்று பார்த்து விடலாம்" என்று அவர் காத்திருந்தார். CHEIRO அவர்கள் Mark Twain அவர்களின கைகளை பார்த்து துல்லியமாக அவருடைய கடந்த காலத்தை கூறினார். Mark Twain அவர்களுக்கு ஒருத்தருடய எதிர்காலத்தை பற்றி முன்னமே தெரிந்து கொள்வது ஆச்சரியமாக இருந்தது.
எழுத்தாளர் அல்லவா, எதையும் ஆதாரம் இல்லாமல் நம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. அதனால் அவர் CHEIRO விடம் பல கேள்விகளை கேட்டு தெளிந்தார். CHEIRO அவர்கள் தன்னிடம் உள்ள இரண்டு கை ரேகை பதிவுகளை காட்டி அதில் உள்ள ரேகைகள் ஒன்று போல் உள்ளதை காண்பித்தார். அவர்களுடைய வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் நடந்தேறின என்பதை கூறினார். அந்த இரண்டு கை ரேகை பதிவுகளில் ஒன்று தாயுடயது மற்றொன்று மகளுடயது என்று CHEIRO கூறினார். இந்த சம்பவம் Mark Twain அவர்கள் எழுதிய நாவலான "Pudd’nhead Wilson" க்கு கதை கருவாக அமைந்தது.
மேலும் Mark Twain அவர்கள் Cheiro வின் கைரேகை பதிவு புத்தகத்தில் இவ்வாறு எழுதினார் "Cheiro அவர்கள் என்னுடைய குணத்தினை மிக துல்லியமாக கூறினார். இதை நான் கூற கூடாது என்று நினைத்தாலும் Cheiro வின் ஆளுமை என்னை இதை ஒப்புக்கொள்ள வைத்தது".
புதன், 17 நவம்பர், 2021
இந்துமத சாஸ்திரத்தில் பெண்களுக்கு ஸ்ரார்த்தம் அதாவது மூதாதையரகளுக்கு திவசம் கொடுக்கும் உரிமை இல்லையா
இந்துமத சாஸ்திரத்தில் பெண்களுக்கு ஸ்ரார்த்தம் அதாவது மூதாதையரகளுக்கு திவசம் கொடுக்கும் உரிமை இல்லையா?
இந்த கேள்விக்கு எழுத்தாளர் பாலமுருகன் அவர்கள் ஒரு பெண்மணிக்கு கொடுத்த அற்புதமான இதிகாச புராணத்தை மேற்கோள் காட்டி கூறிய விளக்கம்.
"இந்துமத சாஸ்திரத்தில் மனைவிக்கு தர்ப்பணம் செய்கின்ற உரிமை இல்லை. கணவன் செய்யும்பொழுது அருகில் இருந்தும், இறந்து போன தன் கணவனுக்கு மகன் செய்கிறபொழுது தொலைவிலிருந்தும் அவள் பார்க்க வேண்டும் என்றே விதித்திருக்கிறது."
"நான் என் தகப்பனாருக்கு இதுபோலவே தர்ப்பணம் செய்ய விரும்புகின்றேன். இன்னும் சிறப்பாக செய்ய விரும்புகின்றேன். வெறும் நீர் அல்லாது மற்ற பண்டங்களும் செய்ய விரும்புகின்றேன். நான் திவசம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு அந்த உரிமை இல்லையா என்று ஒரு பெண் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் கேட்டார். அதற்கு பாலகுமாரன் அவர்கள் "ஆஹா. நீங்கள் தாராளமாக செய்யலாமே" என்று அவரிடம் சொன்னதும் அவர் முகம் மலர்ந்தார். "உண்மையாகவா, அல்லது வெற்று சமாதானமா." "உண்மையாக. ஒரு பெண்மணி தெவசம் செய்திருக்கிறார்." "யார்?" "சீதாபிராட்டி" "எப்போது? எங்கே? வனவாசத்தில் இராமர் தசரதருக்கு செய்ய வேண்டிய பித்ருக்களான நாள் வந்ததும் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தார். நடு வனாந்தரத்தில் இருந்தார். "லக்ஷ்மணா, கிராமங்களுக்கு போய் ஏதாவது தானியங்கள் வாங்கி வா. சிரார்த்தத்திற்கு உண்டான பொருள்களை சேகரித்து வா" என்று கட்டளை இட்டார். லக்ஷ்மணன் விரைவாகப் போனார். "சீதா, நானும் இங்கே ரிஷிகளின் ஆசிரமத்தில் படைக்கப்பட வேண்டிய உணவுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன். அந்த தானியங்களை சமைத்து நாம் உணவாக நம் பித்ருக்களுக்கு கொடுக்கலாம்" என்று ராமரும் நகர்ந்து போனார். சிரார்த்தம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கியது. சீதாபிராட்டி, கணவனும் வரவில்லை. கொழுந்தனும் வரவில்லையே என்று கவலைப்பட்டாள். சிரார்த்த காலம் முடியும் நேரம் நெருங்கையில் எழுந்தார். மனம் குவித்தார். சில பழங்களை சுட்டு மணல் மேட்டின் மீது வைத்தார். கையில் இருந்த சிறிது மாவை பிடித்து கெட்டியாக்கி அருகிலிருந்த மரத்திலிருந்து தேன் சேகரித்து அதை பிசைந்து இலையில் வைத்து மனம் உருகி தன் மாமனாரை வேண்டினார். 'இந்த வனாந்தரத்தில் எங்களுக்கு கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தயவு செய்து வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நேரே வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் என் மனம் சாந்தி அடையும்' என்று சொல்ல, அங்கு சில உருவங்கள் தோன்றின. அந்த மாவு பிண்டத்தின் மீதும், பழங்கள் மீதும் தங்கள் கையை வைத்து எடுத்துக் கொண்டதுபோல சுவீகரித்தன. 'நீங்களெல்லாம் யார்?' கொஞ்சம் திகைப்புடன் சீதாபிராட்டி கேட்டார். அவருக்கு வந்திருந்த உருவங்கள் எதையும் அடையாளம் காண முடியவில்லை. "நான் தசரதன். உன்னுடைய மாமனார் இவர்களெல்லாம் நம்முடைய முன்னோர்கள். இவர்களை வணங்கி அவர்கள் வாழ்த்தை பெற்றுக்கொள். நீ கொடுத்த தேனும் மாவும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. சுட்ட பழம் சுவையாக இருந்தது. மனம் உருகியும், முழுமனதோடும், நல்ல அன்போடும் நீ கொடுத்த இந்த பண்டங்களை நான் எடுத்துக் கொண்டேன். நீ மிகவும் சிரத்தையாக சிரார்த்தம் செய்திருக்கிறாய். அன்பும், அடக்கமும் கலந்த இந்த சிரத்தை என்னை சந்தோஷப்படுத்தியது" என்று வாழ்த்தினார். "நீங்களெல்லாம் வந்திருப்பது தெரிந்தால் என் கணவர் எவ்வளவு சந்தோஷப்படுவார். நான் சிரார்த்தம் செய்தேன். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று நான் அவரிடம் சொன்னால் என்னை நம்புவாரா." "நிச்சயம் நம்புவார். அதற்குண்டான சாட்சிகளை தயார் செய்து கொள்." என்று தசரதர் கட்டளை இட்டார். "பசு நீ தயவு செய்து சாட்சியாக இருந்து என் மாமனாரோடு நான்பேசியதை என் கணவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏ! தாழம்பூவே. என் மாமனார் வந்திருக்கிறார். அவருக்கு உன் அடிமடியில்தான் நான் தினைமாவு வைத்தேன். நீ சாட்சியாக இருக்க வேண்டும். ஏ! அக்கினியே. நீ விளக்காக இருந்து இந்த சிரார்தத்திற்கு நடுவே என் மாமனார் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாய். நீ சாட்சியாக இருக்க வேண்டும். ஏ! பல்குனி நதியே! உன்னுடைய நதியின் நீர் எடுத்து வந்துதான் இங்கு சுத்தம் செய்தேன். இந்த பண்டங்களை சுற்றி உன் நீரால்தான் அவருக்கு நிவேதனம் செய்தேன். எனவே, நீராகிய நீயும் எனக்கு சாட்சியாக இருக்க வேண்டும்" என்று சொன்னாள். "இவர்களை சாட்சியாக வைத்து மறுபடியும் உங்களை வணங்குகின்றேன். நீங்கள் என் சிரார்த்தத்தை ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி. நான் பாக்கியசாலி. நான் நலமோடு என் புருஷனோடு நீண்ட நெடுங்காலம் இருக்க என்னை ஆசிர்வதியுங்கள்" என்று வணங்கினார். தசரதரும், அவரது முன்னோர்களும் சீதாபிராட்டியை ஆசிர்வதித்தார்கள். சிரார்த்தம் முடிந்ததும் சீதாபிராட்டி களைப்புடன் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார். கண்மூடி தன் மாமனாரையும், வந்திருந்த மற்ற முன்னோர்களையும் மனதுக்குள் இருத்திக் கொண்டாள். தபதப்வென்று இராமர் ஓடி வருகின்ற சப்தம் கேட்டது. "எழுந்திரு. எழுந்திரு என்ன பகல் தூக்கம். நான் ஒரு ரிஷியிடம் சிலநல்ல விஷயங்கள் வாங்கி வந்திருக்கிறேன். எங்கே லக்ஷ்மணன்!" என்று கேட்க லக்ஷ்மணன் வேகமாக நடந்து வந்தான். அவனிடமும் நிறைய பண்டங்கள் இருந்தன. "இந்தா இதை வறுத்து வை. இதை அவித்து வை. இந்தா. என்று விதம்விதமான பண்டங்களை அவர் நீட்டினார். "இவையெல்லாம் நல்ல பண்டங்கள் பித்ருக்களுக்கு கொடுப்பதற்கு உகந்த பண்டங்கள்" என்று இராமர் சந்தோஷப்பட்டார். மெல்ல சீதை தயங்கினாள். "என்ன? இன்னும் தூக்கம் போகவில்லையா?" "இல்லை. நான் தூங்கவேயில்லை." "பிறகு என்ன செய்து கொண்டிருந்தாய்?" "சிரார்த்தம் செய்தேன்." "யாருக்கு?" "என்னுடைய மாமனாரான உங்கள் தகப்பனாருக்கு." "எப்படி?" "இதோ தேனும், மாவும் இருக்கிறது. பழங்கள் சுட்டு வைத்து அவைகளை இலையில் வைத்து படைத்தேன். இந்த இடத்தை சுத்தம் செய்தேன். அவர்களை வந்து எடுத்துக் கொள்ளும்படி வேண்டினேன்." "பிறகு?" "உங்கள் தகப்பனாரான என் மாமனார் நேரில் வந்து, மிக்க சந்தோஷம். உன் சிரார்த்தத்தை எடுத்துக் கொள்ள வந்தேன். இந்த பண்டங்கள் சுவையாக இருக்கின்றன. நீ சிரத்தையாக செய்த சிரார்த்தம் என்னை ஸ்வீகரித்தது. என்னை மகிழ்ச்சி படுத்தியது. இவை அனைத்தையும் நான் ஸ்வீகரிக்கிறேன்" என்று சொன்னார்." "அடடா, இதை எப்படி நம்புவது?" ஸ்ரீ இராமர் உரத்த குரலில் கேட்டார். "அந்த சந்தேகம் எனக்கும் வந்தது. என்ன செய்வது என்று என் மாமனாரையே கேட்டேன். யாரையாவது சாட்சியாக வைத்துக் கொள் என்று சொன்னார்." "அப்படியா. நீ செய்த சிரார்த்தத்திற்கு யார் சாட்சி." "இந்த பசு சாட்சி இந்த தாழம்பூ புதர் சாட்சி. இந்த அக்கினி விளக்கு சாட்சி. பல்குனி நதி சாட்சி" என்று அமைதியாகச் சொன்னாள். "இல்லை. என்னால் இவைகளை ஒன்றும் நம்ப முடியவில்லை." "இவர்களை கேளுங்கள். சாட்சி சொல்லும்". "நதியே, புதரே, பசுவே, விளக்கே இவள் சிரார்த்தம் செய்தாளா? ஒரு பெண் செய்த சிரார்த்தத்தை பித்ருக்கள் ஏற்றுக் கொண்டார்களா சொல்லுங்கள்" இராமர் அதட்டலாகக் கேட்டார். புதரும், பசுவும் மிரண்டன. விளக்கு துடித்தது. பல்குனி நதி அமைதியாக இருந்தது. "சொல்லுங்கள்" என்று கேட்க, "நாங்கள் எதையும் அறியோம்" என்று அவைகள் ஒரே குரலில் கூறின. சீதை விக்கித்துப் போனாள். இராமர் சட்டென்று தர்ப்பை பாயில் உட்கார்ந்தார். ஆசமனம் செய்தார். அருகில் தம்பியும் பாய் போட்டு உட்கார அவரும் சிரார்த்தத்திற்கு தயாரானார். "கொண்டு வந்த பொருள்களை வை" என்று கோபம் குறையாமல் சீதையை நோக்கி கட்டளை இட, அவளால் கால தாமதம் ஆகி விடுமே என்று பயப்பட, சீதை விரைவாக செயலாற்றி அவருக்கு முன்பு அந்தந்த விஷயங்களை வைத்து சிரார்த்த காரியங்களை விரைவாகச் செய்ய ஏற்பாடு செய்தாள். நீர் கொண்டு வைத்தாள். மனம் துக்கத்தில் ஆழ்ந்தது. ஸ்ரீ ராமர், சூரியனை நோக்கி வணங்கி, "சூரியனே நீ இங்கு வந்து பிராமணனாக அமர்ந்து இந்த சிரார்த்தத்தை என்னுடைய தந்தையிடம் கொடுக்கும்படியாக வேண்டுகிறேன்" என்றபோது ஒரு அசரீரி கேட்டது. "சிரார்த்தம் முடிந்துவிட்டதே." "என்னது?" "உங்கள் தகப்பனாருக்கு இன்று நீங்கள் செய்ய வேண்டிய சிரார்த்தம் செய்தாகிவிட்டதே" என்று சொல்ல, "யார் பேசுவது? ஏன் மறைந்திருந்து பேசுகிறீர்கள்?" என்று கோபமாக கட்டளை இட சூரியன் எதிரே வந்து நின்றார். "நான் சூரியன் இந்த சிரார்த காரியம் உங்கள் மனைவியால் சிறப்பாக செய்யப்பட்டு பித்ருக்கள் உள்ளே நுழைந்து ஆவலாக அவர்கள் கொடுத்த பண்டங்களை உண்டு அவளை ஆசிர்வதித்துவிட்டு போனார்கள். அந்த பிரசாதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல மனம் நெகிழ்ந்தார். சூரியனை வணங்கி, "சரி" என்று சம்மதித்தார். சூரியன் அந்த இடத்திலிருந்து மறைந்தார். "சந்தோஷமாக இருக்கிறது. என் மனைவியே நான் இல்லாதபோது நான் நெடுந்தூரம் போன போது சிரார்த்த காரியங்கள் செய்தாள். அவை ஏற்கப்பட்டன என்று கேட்க, மிக சந்தோஷமாக இருக்கிறது. சீதையே! நீ மிகப் பெரிய புண்ணியசாலி. இத்தனை நாள் நான் தர்ப்பணம் செய்திருக்கிறேன். மூன்று முறை சிரார்தம் செய்திருக்கிறேன். ஆனாலும் என் தகப்பனோ, என் பித்ருக்களோ என்னிடம் வரவில்லை. நான் சிரத்தையாக செய்யவில்லை போலும். ஆனால் நீ சிரத்தையாகச் செய்து அவர்கள் தரிசனத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்றிருக்கிறாய். நீ என்னைவிட பாக்கியசாலி" என்று புகழ்ந்தார். லக்ஷ்மணன் சீதையை விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். இராமரும், லஷ்மணரும் விலகிய பிறகு அவள் பல்குனி நதியை பார்த்தாள். "என்ன ஏன் பொய் சொன்னீர்கள். அட பல்குனி நதியே. நீ இனி மேலே பிரவாகித்து என்ன பயன். உன்னிடமிருந்து நீர் கொண்டு வந்து செய்த சிரார்தத்தை இல்லையென்று சொல்லிவிட்டாயே. எனவே நீ அந்தர்வாகினியாக பூமிக்கு அடியில் ஓடும் நதியாக இரு" என்று சாபமிட்டாள். பல்குனி நதி சுருண்டு கொண்டது. "தாழம்பூ புதரே. எவ்வளவு அருமையான மணம். எவ்வளவு பெரிய மடல் என்று ஆசையாக உன்னை பறித்து உன் மீது நைவேத்யம் வைத்தேனே. இப்படி தவறாக பேசிவிட்டாயே. இல்லையென்று பொய் சொல்லிவிட்டாயே. நான் தினந்தோறும் பூஜிக்கின்ற சிவன் உனக்கு ஆசிர்வாதம் தரமாட்டார். நீ அவருக்கு பிடிக்காததாக, அவர் மீது சூட்ட முடியாததாக இரு. உனக்கும், சிவனுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. ஏ பசுவே, வாய் திறந்து உண்மையை சொல்லியிருக்க வேண்டாமா. உன் வாய் எப்பொழுதுமே கோணலாகவே கிடக்கட்டும். உன்னுடைய பின்பக்கம் நல்ல பாக்கியத்தை பெறட்டும். வாய் அபாக்கியவானாக இருக்கட்டும்" என்று சபித்தாள். விளக்கு துடித்தது. "அக்னி பொய் சொல்லலாமா. அதுதானே சாட்சி. உலகத்தில் எல்லோருக்கும், எதற்கும் சாட்சியாக இருக்கக் கூடியவன். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பாலமாக இருக்கக்கூடியவன் நீதானே. உனக்கு நல்லது. கெட்டது தெரியவில்லை. உனக்கு எது சரி, தவறு என்று தெரியவில்லை. உன்னால் உண்மையாக இருக்க முடியவில்லை. நல்லது, கெட்டது தெரியாத நீ எல்லாவற்றையும் அழிப்பவனாக, எல்லாவற்றையும் உருக்குலைப்பவனாக இரு. உன்னால் நல்லவைகள், கெட்டவைகள் சகலமும் தீயட்டும். நல்லவைகளை அழித்த பாவத்தை கடைசிவரை உன் தலையில் விழுந்து கொண்டே இருக்கும்" என்று சபித்தாள். அக்னி துடித்து மெல்ல அடங்கியது. "இதுதான் கதை. சீதை செய்த சிரார்தம் ஏற்கப்பட்டது மட்டும் இல்லை. அந்த சிரார்தத்தை மறுதலித்த நான்கு பேருக்கும் கடும் தண்டனை கிடைத்தது. புரிகிறதா. பெண்கள் சிரார்தம் செய்ய முடியாது என்று எந்த அந்தணனும் சொல்ல முடியாது. உங்களுக்கு அவர்கள் உதவியாக வராவிட்டால் என்ன, நீங்களே காலையில் எழுந்து உடலை தூய்மை படுத்திக்கொண்டு ஒரு இலையில் உங்களுடைய பெற்றோர்களுக்கு வேண்டிய விஷயங்களை நீங்களே தயார் செய்து, இது உனக்காக அப்பா, இது உனக்காக அம்மா. என் மூத்தோர்களே இந்த பண்டங்கள் உங்களுக்காக, என தயார் செய்து அதை படையல் இட்டு, விழுந்து வணங்கி, "என்னால் இயன்றதை செய்தேன். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுங்கள். கண்ணீர் வடிய அவர்களை நினைத்து வணங்குங்கள். அன்று அவர்கள் வருகைக்காக காத்திருங்கள். ஏதோ ஒரு க்ஷணம் அவர்கள் உங்களை தொடுவார்கள். நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.
புதன், 27 அக்டோபர், 2021
ரமண மகரிஷியின் ஹஸ்த தீட்சை
ரமண மகரிஷியின் ஹஸ்த தீட்சை
1908-ல் பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் இருந்து விடைபெற்று, காவிய கண்ட கணபதி சாஸ்திரி திருவொற்றியூருக்குப் பயணமானார். அங்கே, விநாயகர் கோயிலில் தங்கிக்கொண்டு, தன் தவத்தைத் தொடர்ந்தார். பிற்பகல் ஒன்றில் விழித்தபடி படுத்திருந்தபோது, அவருக்கு அருகே யாரோ அமர்வதுபோல் இருந்தது. யார் என்று பார்த்தபோது, பகவான் ஸ்ரீரமண மகரிஷி தன் உள்ளங்கையை, காவிய கண்ட கணபதியின் தலையில் அழுத்தி வைத்திருந்தார். பகவானின் உள்ளங்கை பட்டதும், கணபதி சாஸ்திரிக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்வு ஏற்பட்டது. 1908-ல் நடந்த இந்த விஷயத்தை, 1929-ல் அன்பர் ஒருவர், "கணபதி சாஸ்திரியாருக்கு திருவெற்றியூர் வந்து ஹஸ்த தீட்சை கொடுத்தீர்களாமே?" என்று கேட்டபோது, பகவான், "ஆமாம், ஒரு நாள் திடீரென்று எங்கோ இந்த இடம் விட்டு மேலே பறப்பது போல் தோன்றியது மேலே எழுந்ததும், காட்சிகள் மறைந்தன. இடம் முழுவதும் வெள்ளையாயிற்று, ஏதோ ஓர் இடத்துக்கு நகர்கிறோம் என்ற உணர்வு இருந்தது. பிற்பாடு மெல்லக் காட்சிகள் தெரிந்தன. நான் கீழே இறங்கி நின்றேன். அந்த இடம் ஒரு நெடுஞ்சாலையாக இருந்தது. அந்த இடத்தில், நான் நடந்து போனேன். அங்கே ஒரு விநாயகர் கோயில் இருந்தது. உள்ளே போய் சிறிது நேரம் யாரோடு பேசினேன், என்ன பேசினேன் என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடம் திருவெற்றியூர் என்றும், சிவன் கோயிலுக்கு அருகே இருக்கிற விநாயகர் கோயில் என்றும் மனசுக்குத் தோன்றியது. மறுபடியும் கண் விழித்துப் பார்த்தபோது, திருவண்ணாமலையில் இருந்தேன்" என்று சர்வ சாதாரணமாக, எந்தவிதக் கர்வமுமின்றி அந்த விஷயத்தை வெளிப்படுத்தினார். வான் மார்க்கமாகப் போய், தன் அன்பருக்குக் கொடுத்த ஹஸ்த தீட்சையைத் தான் தந்ததாக ஒருபோதும் அவர் சாதித்துக் கொள்ளவில்லை. தன்னால் அவ்விதம் செய்ய முடியும் என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அது பற்றி அவராக வாய் திறக்கவும் இல்லை. காவிய கண்ட கணபதி, இது பற்றி அன்பர்களிடம் சொல்லி, அந்த அன்பர்கள் வினவிய பின்பு, அதாவது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு, ‘ஆமாம், அப்படி நடந்தது’ என்று, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அதை மறைக்கவும் இல்லை; தன்னால் அப்படிச் செய்யமுடிந்தது என்று கொண்டாடிக்கொள்ளவும் இல்லை. என்னவோ அப்படி நடந்தது என்று மிக எளிமையான விஷயமாக அதைச் சொல்கிறார்.
நந்தனார் சரித்திரம்- Part 2
நந்தனார் சரித்திரம்- Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...
Thiruvannamalai Girivalam benefits
-
திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்புகள்/ மகிமைகள் சிவாய நம திருவண்ணாமலை இடைக்காடர் சித்தர் வாழ்கின்ற தலம். ரமண மகரிஷி, வேதா...
-
ஈசலிறகு போல இவ்வாழ்க்கை ஊசலாடும் உயிர்வாழ்க்கை சதமல்ல நிரந்தரமல்ல மாயவனின் வலையிலே அகப்படும் கயல் போலே அலையலையாய் வரும் வாழ்க்கை சூழலில...
-
குதம்பை சித்தரும் வாசி யோகமும் ஒருவருக்கு யோக நிஷ்டையில் இப்பிறவியில் நாட்டமுண்டு எனில், அவர் முப்பிறவியிலும் இந்த யோக நிஷ்ட்டையில் ஒரு ...



