ஞாயிறு, 30 மே, 2021

CHEIRO வின் சுவாரஸ்யங்கள்


CHEIRO


முந்தய கட்டுரையில் CHEIRO வின் கை ரேகை நிபுணத்துவத்தை பற்றி சோதித்த "NewYork World" என்ற பத்திரிகையின் நிருபர் எப்படி ஒரு கை ரேகையை பார்த்து ஒருவர் கொலை குற்றவாளி என்று இவரால் கண்டறிய முடிந்தது என்று ஆச்சர்ய பட்டார். மேலும் இவரோ மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் ஒரு கொலை குற்றவாளி. இவருக்கு எப்படி Dr. Meyerக்கு  விதிக்கப்படும் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்றல்லாம் பல கேள்வி கனைகுளுடன் CHEIRO விடம் இருந்து விடைபெற்றார். நிருபர் CHEIRO விடம் எதையும் கூறாமல் விடைபெற்றார். CHEIRO விற்கு தான் ஆராய்ந்து கூறிய கை ரேகை பதிவுகள் எல்லாம் உண்மையா என்று தெரிந்து கொள்ள ஆவல். CHEIRO நிருபரிடம் அதை கேட்டும் விட்டார். அனால் நிருபரோ இந்த கேள்விக்குண்டான பதில்களை வரும் ஞாயிறு அன்று வரும் நியூ யார்க்   "World" பத்திரிகையில்  தெரிந்து கொள்வீர்கள் என்று கூறிவிட்டு சென்றார். CHEIROவால் சனி கிழமை இரவு முழுவதும் சரியாக தூங்க முடியவில்லை. ஞாயிறு பொழுது விடிந்ததும் தன்னுடைய பணியாள் கதவை தட்டி பத்ரிக்கையினை கொடுத்தார். அதில் இவ்வாறு எழுதி இருந்தது " CHEIRO கை ரேகை படித்த படிவங்களின் நபர்களான Mayor , District  Attorney, Nicoll Ward McAllister , Dr. Meyer போன்றவர்களான வாழ்க்கை பற்றி  வெற்றிகரமாக படித்தார்" என்று கொட்ட எழுத்தில் இருந்தது.  

இப்போழுது நிருபரின் மனதில் எழுந்த கேள்வி Dr. Meyerக்கு விதிக்க படவிருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறுமா?, CHEIRO சொன்னவை பலிக்குமா?. இதை பற்றி தெரிந்து கொள்ள அடுத்த பதிவில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits