வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள்- 3




பசிப்பிணி போக்கும் தாவரம் போலே 
பிறவிப்பிணி தீர்த்து எமக்கு 
தா   -  வரம் தருவாய் தீர்த்த பதியே 

தாவரம் பசிப்பிணி தீர்க்கும் முகில் மழை போலே 
ஏழை- எளியோர்க்கும் அருள் மழை 
யோக மழை தருவாய் தாண்டவராயா 
தில்லை தாண்டவராயா  

இருப்போருக்கும் இயலாதவருக்கும் எல்லா உயிர்களுக்கும் 
உயிராற்றல்  இயக்கமாய் இறைவனாய் 
தாள -  லயம் நடனமாடும் தில்லை தாண்டவராயா  
ஆனந்த நடனமாடும் ஆலாள கண்டனே திருநீல கண்டனே 

சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் 
பக்தர்களுக்கும் காட்சி தரும் தில்லை தாண்டவராயா 
பேரெழிலாய் பேரண்டமாய் பேரம்பலமாய் திகழும் தாண்டவராயா 
ஆடிய பாதத்தை பணிந்தே ஆனந்த கூத்தாடுவோம். 


                        சிவ சிதம்பரம் துணை 
                        ஓம் திருச்சிற்றம்பலம் புகழே துணை 


                                                                                                       ஈசன் அடிமை 
                                                                                                       புகழ் சித்தர் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...