செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள் - 2

காற்றின் சலனங்கள் கீதமே 
மரம், செடி, கொடி, நடனமாட 

நீரோடையின் சலனங்கள் 
உயிரினங்களின் தாகம் தீர்க்க

செந்தீயின் சலனங்கள் 
உலகிற்கு உதவிட 

மேகத்தின் சலனங்கள் 
உயிர் மழை ஜீவ மழை 
சகலத்திற்கும் ஜகத்திற்கும் 
அகிலத்திற்கும் ஆண்டவனின்  
அகப்பார்வையினாலே இயங்க வைத்த இறைவா 

மேகங்களில் சலனமாடும் திருநீலகண்டேஸ்வரா 
ஜலங்களிலே சலனமாடும் ஜலகண்டேஸ்வரா 
தீயினிலே சலனமாடும் அருணாச்சலேஸ்வரா 
அனைத்திற்கும் ஆதார பொருள் நீயே 

காலத்தை இயக்கும் காலபைரவா 
அடைந்தேன் உன்னை சரணடைந்து 
சர்வ வியாபக பொருள் தத்துவமே 
தத்துவமசி சிவத்துவமசி 

சிவஓம் சிவஓம் என்று 
உன்னை சரணடைந்தேன் 

                                         சிவன் அடிமை 
                                         திருச்சிற்றம்பலம் 
                                         புகழ் சித்தன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits